twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இடியாப்பச் சிக்கலில் காவலன்!

    By Sudha
    |

    தியேட்டர் இல்லை, நஷ்ட ஈடு தொல்லை, வெளிநாட்டில் முட்டுக்கட்டை... இடியாப்பச் சிக்கலில் காவலன்!

    சென்சார் சான்று வாங்கி, படம் தியேட்டரைத் தொடும் நேரத்தில் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது விஜய்யின் காவலன்.

    தனது முந்தைய படங்களின் நஷ்டத்துக்கான ஈட்டுத் தொகையை விஜய் தந்தால்தான் காவலனை ரிலீஸாக விடுவோம். இல்லாவிட்டால் அந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டோம் என அறிவித்துள்ளது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.

    இந்த சங்கத்தின் அவசரக் கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தின் முடிவில் பேசிய, சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், "விஜய்யின் ஆறு படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளன. ஆனால் நாங்கள் கேட்பது அவர் தனது சுறா பட நஷ்டத்தை மட்டுமாவது தரவேண்டும் என்பதுதான். அப்படித் தராவிட்டால் காவலனை ரிலீஸ் பண்ணவே விடமாட்டோம்," என்றார்.

    இன்னொரு பக்கம், படத்துக்கு நிதி வழங்கிய பைனான்ஸியர்கள் உடனடியாக பணத்தை செட்டில் செய்தாக வேண்டும் என நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்.

    வட தமிழகம், சென்னை போன்ற பகுதிகளில் இந்தப்படத்துக்கு ஒரளவு திரையரங்குகள் கிடைத்தாலும், தென் மாவட்டங்களில் இதுவரை 10 திரையரங்குகள் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மிகப் பலம் வாய்ந்த சக்திகள் அத்தனை திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக காவலன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நெருக்கடிகள் காரணமாக, தனது வேக வேகமான அரசியல் நகர்வுகளை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளார் விஜய். அதிமுக, ஜெயலலிதா, அரசியல் கட்சி துவக்கம் போன்றவை குறித்து அவர் இப்போது வாய் திறப்பதே இல்லை. இதுகுறித்து அதிகம் பேசி வந்த அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகரனும் அமைதியாகிவிட்டார்.

    வெளிநாடுகளிலும் காவலனுக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். புதிய படங்களை பெரும் விலைக்கு வாங்க வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

    இந்த பொங்கலுக்கு காவலன் வெளியாக வேண்டுமானால், இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பேசித் தீர்க்கப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் காவலன் நிலை கேள்விக்குறியதாகிவிடும்.

    English summary
    Vijay is fighting a fierce battle to get his Siddique directed Kaavalan released. The Tamil Nadu Theatre Owners Association (TTOA) at an emergency meeting in Tiruchi on Thursday has resolved "not to extend any co-operation to Kaavalan". On the domestic front, more trouble is expected for Kaavalan as the financiers of the film move in for the final settlement. There is terrific pressure from powerful sources to see that the film does not release for Pongal, as there is just not enough theatres to screen all the festival films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X