Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிரஞ்சீவி மகள் வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம்
ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா, வீட்டை விட்டு ஓடிப் போய் தனது காதலரை கல்யாணம் செய்து கொண்டது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Click here for more images |
சினிமாவில் மட்டும் காதலுக்கு மரியாதை செய்த அவர் நிஜத்தில் காதலுக்கு எதிரியாக மாறினார். தனது மகளை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டோடு சிறை வைத்தார். காதலனையும் மறக்கும்படி உத்தரவிட்டார்.
கடந்த ஒரு வருடமாக கல்லூரிக்குப் போகாமல் வீட்டுக் காவலில் இருந்து வந்தார் ஸ்ரீஜா. ஆனால் காதலுக்குத்தான் வலிமை ஜாஸ்தியாயிற்றே. தனது வீட்டுக் காவலையும் மீறி, வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றி விட்டு காதலனுடன் ஓடிப் போனார் ஸ்ரீஜா.
இன்று ஹைதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ மடத்தில் வைத்து காதலரை கல்யாணம் செய்து கொண்டார் ஸ்ரீஜா.
கல்யாணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை இருவரும் தம்பதி சமேதராக சந்தித்தனர். ஸ்ரீஜா கூறுகையில், நானும், சிரீஷும் கடந்த நான்கு ஆண்டுளாக காதலித்து வருகிறோம். ஆனால் எனது பெற்றோர் இந்த்க காதலை ஏற்கவில்லை.
கடந்த ஒரு வருடமாக என்னைக் கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டுக் காவலில் வைத்து விட்டனர்.
எனது குடும்பத்திடமிருந்து எனக்கும், சிரீஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை. எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறோம். எனவே போலீஸார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இன்று மாலை எனது வீட்டுக்கு இருவரும் சென்று குடும்பத்தினரின் ஆசியைப் பெறத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சிரீஷ் பரத்வாஜ் கூறுகையில், இது ஜாதி விட்டு ஜாதி செய்த காதல் கல்யாணம். ஸ்ரீஜாவின் குடும்பத்தினர் எங்களை மிரட்டினர்.
ஸ்ரீஜாவின் தந்தை மிகவும் சக்தி வாய்ந்தவர், அரசியல் பலமும், ஆள் பலமும் கொண்டவர். எனவே எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது பெற்றோருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.
சிரஞ்சீவியின் மகள் வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் செய்தது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை