Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஸ்வரூபம்... ரிசர்வேஷன் தொடங்கியது.. ஒரு வாரத்திற்கு டிக்கெட் இல்லை
விஸ்வரூபம் பெரும் இடியாப்பச் சிக்கலில் சிக்கி வருமா, வராதா என்ற கேள்விகளில் உழன்று ஒரு வழியாக வியாழக்கிழமை திரைக்கு வருகிறது. கமல்ஹாசன் சென்டிமென்ட்டை நம்புவதில்லை என்பதால் வெள்ளிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமையே படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார் என்று கூறுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படுகிறது. இதையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் படம் பார்க்கத் தயாராகி வருகின்றனர்.
இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு செய்வதில் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் ...
சென்னையைப் பொறுத்தவரை, சத்யம், சாந்தம், தேவி, சாந்தி, உட்லண்ட்ஸ், எஸ்கேப், அபிராமி, ஸ்வர்ணசக்தி, சங்கம், உதயம், மினி உதயம், ஏ.ஜி.எஸ்., கமலா, பைலட், மோட்சம், சைதை ராஜ், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம், பெரம்பூர் எஸ்.2, பாரத், ஸ்ரீபிருந்தா, மகாராணி, எம்.எம். தியேட்டர், மாயாஜால், பிரார்த்தனா, ரோகிணி, திருவான்மியூர் எஸ்.2, கணபதிராம், வெற்றி, கொளத்தூர் கங்கா, மூலக்கடை சண்முகா, ராக்கி, முருகன், பூந்தமல்லி சுந்தர் உள்ளிட்ட பல்வேறு தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. புறநகர்களிலும் ஏராளமான தியேட்டர்களில் வி்ஸ்வரூபம் திரையிடப்படவுள்ளது.
இங்கு அதிகாலை முதலே பெரும் திராளானோர் கூடி முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்து போய் விட்டதாக செய்திகள் கூறுகின்றன.