அகத்தியனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே'

விடுகதை, காதல் கோட்டை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் அகத்தியன். தேசிய அளவில் சிறந்த இயக்குருக்கான விருதைப் பெற்ற ஒரே தமிழ் இயக்குநரும் இவர்தான். நீண்ட காலமாக இயக்காமல் அமைதி காத்து வந்தார் அகத்தியன். இந்த நிலையில் மீண்டும் திரும்பி வந்துள்ளார்.
80களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத் தலைப்பையே தனது மறு வருகைப் படத்திற்கும் சூட்டியுள்ளார் அகத்தியன்.
விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்தான் இப்படத்தின் நாயகன். அம்முவாகிய நான் படப் புகழ் பாரதி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். விக்ரமாதித்யாவும் இருக்கிறார்.
மூன்று பேருமே சினிமாவில் நுழைந்து பெரிய பிரேக்குக்காக காத்திருப்பவர்கள். இவர்களை வைத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தைக் கிள்ள வருகிறார் அகத்தியன்.
தனது மறு வருகை குறித்து அகத்தியன் கூறுகையில், இது முற்றிலும் இளைஞர்களுக்கான படம். எனவே இளமையாக இருக்கும், ரொமான்ஸை வித்தியாசமான கோணத்தில் இதில் காட்டியுள்ளேன்.
இளம் காதலர்களின் உணர்வுகளையும், காதலையும் சொல்லும் நல்ல படமாக இது இருக்கும். ஷட்டிங் முழு வேகத்தில் நடந்து வருகிறது. படத்தின் ஒரு பகுதியை கொச்சி, தேக்கடி, கொடைக்கானலில் படமாக்க உள்ளோம் என்றார்.
ப்ளூ வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











