Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐஸ்-அபிஷேக் திருமணம்: வீட்டின் மீதுவிமானம் பறக்க தடை கோரும் அமிதாப்
அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணத்தின் போது என் வீட்டின் மீது எந்த விமானமும் பறக்க கூடாது என அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மும்பையில் தன் வீட்டில் அபிஷேக்-ஐஸ்வர்யாவின் திருமணத்தை நடத்தவுள்ளார் அமிதாப்பச்சன். இந்த திருமண நிகழச்சிகள் வரும் 18ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கின்றன.இதில் முக்கியமான உறவினர்கள், நண்பர்கள் உள்பட 100 பேர் மட்டும் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.
அரசியல்வாதிகள் கலந்து கொண்டால் பாதுகாப்பு பிரச்சனை அதிகரிக்கும் என்பதால் அவர்களை அழைக்கவில்லை. ஆனாலும் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் மற்றும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.
சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளரும அரசியல் புரோக்கருமான அமர் சிங்கும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் உள்ளார்.
திரை நட்சத்திரங்களுக்க அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. அதே நேரத்தில் தான் சினிமாவில் அறிமுகமான நேரத்தில் உதவிய நண்பர்களை அழைத்துள்ளார் அமிதாப்.
பாதுகாப்பு கருதி திருமணத்தன்று தன் வீட்டின் மீது எந்த விமானங்களும் பறக்க அனுமதிக்க கூடாது என மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சகத்திடம் அமிதாப் பச்சன் கேட்டுகொண்டுள்ளார்.
இது எப்டி இருக்கு...