Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நக்மா, கரீனாவுக்கு ஆபாசஅழைப்பு விடுத்தவர் கைது
நடிகைகள் நக்மா, இஷா கோபிகர் உள்ளிட்டோருக்கு தொலைபேசி மூலம் ஆபாசமாக பேசியும், ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொல்லை கொடுத்த ஹைதராபாத் நபரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நடிகைகள் நக்மா, இஷா கோபிகர், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், கங்கனா ரனவத் உள்ளிட்டோருக்கும், நடிகர்கள் சிலருக்கும் அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் வந்தவண்ணம் இருந்தன.இதேபோல நடிகைகளுக்கு தொலைபேசியில் ஆபாசமாக பேசியும் தொல்லைகள் தொடர்ந்து வந்தன. இதுதொடர்பாக மும்பை போலீஸில் இந்தித் திரையுலகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் களத்தில் குதித்தனர். யார் எஸ்.எம்.எஸ். அனுப்புவது, தொலைபேசியில் பேசுவது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், ஹைதராபாத்திலிருந்து இந்த அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மெஹ்ராஜ் என்பவரைப் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் கேட்டுக் கொண்டதால்தான் இவ்வாறு அனுப்பியதாக குண்டைப் போட்டார் மெஹ்ராஜ். இதுகுறித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸார் சிறையில் அடைத்தனர். மெஹ்ராஜ் இவ்வாறு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது புதிதில்லையாம். ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல செய்து சிறைவாசம் அனுபவித்தவர் என்று ஹைதராபாத் போலீஸார், மும்பை போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.