Don't Miss!
- Automobiles இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2007ன் 'தங்கமான' படங்கள்!
ஒன்று பெரியார். சத்யராஜ் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக நேர்த்தியாக, தத்ரூபமாக, இயல்பாக பெரியார் வேடத்தில் நடித்திருந்த பெரியார், இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று.
நிஜப் பெரியாரை பார்த்தது போலவே இருந்ததாக கலைஞர் கருணாநிதியே சத்யராஜின் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டினார்.
தமிழக அரசின் நிதியுதவியோடு உருவான பெரியார், தமிழம் முழுவதும் இளம் தலைமுறையினருக்கு தந்தை பெரியாரின் சமூக போராட்டங்கள், புரட்சிக் கருத்துக்களை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.
கவர்ச்சிகரமான நடிகையாகவே பார்க்கப்பட்ட குஷ்பு முதல் முறையாக மணியம்மை என்ற புரட்சிகர பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார், பாராட்டுக்களையும் வாங்கிக் குவித்தார்.
அடுத்த தங்கம், தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு.
தங்கர்பச்சான் இதுவரை இயக்கியுள்ள படங்களிலேயே தங்கமான படம் என்றால் அது ஒன்பது ரூபாய் நோட்டுதான். இந்தப் படத்திலும் சத்யராஜ் வாழ்ந்து காட்டியிருந்தார்.
மாதவர் படையாச்சி வேடத்தில் அவர் நடிக்கவில்லை, மாறாக, வெள்ளந்தி கிராமத்து ஆசாமியாகவே மாறிப் போயிருந்தார்.
இயல்பான நடிப்பு, எதார்த்தமான வசனங்கள், வலிக்காத இசை என பல நல்ல விஷயங்கள், நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் நமது வாழ்க்கையை புட்டுப் புட்டு வைத்திருந்தார் தங்கர்.
இந்த ஆண்டின் இமயப் படங்களில் நிச்சயம் ஒன்பது ரூபாய் நோட்டுக்கும் தனி இடம் உண்டு என்றால் சந்ேதகமே இல்லை.
எந்தவித மசாலாத்தனமும் இல்லாமல், வசூலைக் குறிக்கோளாக கொள்ளாமல், செயற்கைப் பூச்சுக்கள் இல்லாமல், மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள் இவை.
எனவே இவற்றை 'சூப்பர் ஹிட்' படங்கள் என்ற வரிசையில் சேர்ப்பதை விட, தனித்துவம் கொண்ட படங்களாக, மக்களுக்கான படங்களாக தனித்து விடுவதே இந்தப் படங்களுக்குப் பெருமை.