Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தம்பியை மிரட்டுவதாக பாபிலோனா புகார்
Click here for more images |
காவல் நிலையத்தில் கையெழுத்திடப் போகும்போது தனது தம்பியை போலீஸார் மிரட்டுவதாக காவல்துறை ஆணையரிடம் நடிகை பாபிலோனா புகார் கொடுத்துள்ளார்.
கவர்ச்சி நடிகை மாயாவின் தங்கை மகள் பாபிலோனா. திரைப்படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளித்து அனைவரையும் மயக்கிய பாபிலோனா, சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சரமாரியாக சிக்கி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் வடபழனியில் உள்ள ஒயின்ஷாப் முன்பு நடந்த தகராறில் போலீசாரின் பிடியில் விக்கி வசமாக சிக்கிவிட்டார்.
அப்போது தன்னை பிடித்த பெண் சப் இன்ஸ்பெக்டரை மார்பில் தாக்கி விட்டு விக்கி தப்பினார். பின்னர் விக்கியை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். பிறகு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
அதன்படி விக்கி தினந்தோறும் வடபழனி காவல் நிலையத்தில் சென்று கையெழுத்து போட வேண்டும். இந்த நிலையில் விக்கி கையெழுத்து போட செல்லும் போதெல்லாம் அங்குள்ள போலீசார் அவரை மிரட்டுவதாக அக்கா பாபிலோனாவிடம் கூறியுள்ளார் விக்கி.
இதையடுத்து தனது உறவினர்கள் சிலர் புடை சூழ பாபிலோனா, சென்னை நகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனிடம் புகார் கொடுப்பதற்காக உறவினர்கள் வந்தார்.
அங்கு அவர், நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கும் தனது தம்பி கையெழுத்து போடுவதற்காக வடபழனி காவல்நிலையம் செல்லும் போதெல்லாம் அங்குள்ள போலீசார் அவரை மிரட்டுவதாக கமிஷ்னரிடம் பாபிலோனா விளக்கி கூறினார்.
அதைக் கேட்ட நாஞ்சில் குமரன், இது தொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக பாபிலோனாவிடம் உறுதியளித்தார்.