Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சந்திரசேகர் வயிற்றில் கத்தி பாய்ந்தது!
Click here for more images |
மச்சக்காரன் படத்தை முடித்து விட்ட ஜீவன் அடுத்து பிரியா மணியுடன் இணைந்து தோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
பிரியா மணியின் அப்பாவாக ஆட்டோ டிரைவர் வேடத்தில் சந்திரசேகர் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
படப்பிடிப்பின்போது, ஒரு காட்சியில் ரவுடிக் கும்பலுடன் மோதுவது போன்ற காட்சியில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் சந்திரசேகரின் வயிற்றில் கத்தியால் குத்துவது போல ஒரு காட்சி வைத்திருந்தார்கள்.
வழக்கமாக இதுபோன்ற காட்சியில், பொம்மை கத்தியை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த கத்தி சிறியதாக இருந்ததால் உண்மையான கத்தியை பயன்படுத்தியுள்ளனர். வயிற்றில் குத்துவது போல தான் இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் கத்தி சந்திரசேகர் மேல் படக்கூடாது என்று டைரக்டர் செல்வா திரும்ப திரும்ப சொல்லி காட்சியை படமாக்கியிருக்கிறார்.
ஆனால் ஸ்டண்ட் நடிகர் கத்தியை சந்திரசேகரின் வயிற்றில் நிஜமாகவே சொருகி விட்டார். கத்தி வயிற்றில் பாய்ந்த வேதனையில் கதறியபடி கீழே விழுந்து விட்டார் சந்திரசேகர்.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சந்திரசேகரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வயிற்றில் பாய்ந்த கத்தியை பத்திரமாக எடுத்து விட்டனர். தற்போது சந்திரசேகர் நலமுடன் இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாலும், சந்திரசேகருக்கு எந்த ஆபத்துமில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.