கலைவாணர் என்எஸ்கே... நகைச்சுவையில் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார்!
சென்னை:ஒரு படத்தில் என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி அது, இருவரும் பேசிகொள்வார்கள்.
மதுரம் தொடங்குவார் இப்படியாக...

"இந்த ஆண்கள் கோபக்காரங்க, எதெற்கெடுத்தாலும் சள்ளுண்ணு விழுவாங்க..."
"இல்ல இல்ல... பெண்கள்தான் கோபக்காரர்கள்," என்பார் என்எஸ்கே.
"இல்ல... ஆம்பிளைங்களுக்குத்தான் நாய் குணம், பெண்களுக்கு பொறுமை அதிகம்..."
"அப்படியா..."
"ஆமாங்க, அதேதான்..."
(அடுத்த நொடி, மதுரத்தை கட்டியணைத்து முத்தம் கொடுக்கச் செல்கின்றார் கலைவாணர், கோபப்பட்டு சீறுகின்றார் மதுரம்)
"இந்தாய்யா, என்ன நினைச்செ, இதெல்லாம் வேற யார்கிட்டாயாவது வச்சிக்க... என்பக்கம் வந்த கொன்னுருவேன் ஜாக்கிரதை.."

"பாத்தியா பாத்தியா, பொண்ணுகளுக்குத்தான் கோபம் அதிகம். இப்போ நீ என்னை கட்டிபிடிச்சிப் பாரு, எனக்கு கோபமே வராது, முத்தம் கொடுத்தாலும் கொஞ்சமும் கோபம் வரவே வராது..."
- மறக்க முடியாதவர் என்.எஸ்.கே. பல விஷயங்களில் நம்ம பாக்யராஜூக்கு அவர்தான் முன்னோடி!
-இன்று கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் 109வது பிறந்த தினம்


Click it and Unblock the Notifications











