twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாமதமாகும் தசாவதாரம்

    By Staff
    |

    Kamal with Mallika Sherawat
    தசாவதாரம் படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாகியுள்ளது. படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால், திட்டமிட்டபடி பொங்கலுக்கு வராது என்று கூறப்படுகிறது.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ள தசாவதாரத்தில் கலைஞானி கமல்ஹாசன் கலக்கலான 10 வேடங்களில் அசத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் திறமை காட்டியுள்ளனர்.

    உலகத் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என இந்தியாவின் அனைத்துத் திரையுலகினரும் கூட தசாவதாரத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

    முதலில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட வேலைகள் முடியாததால் தீபாவளிக்குத் தள்ளிப் போடப்பட்டது. இருப்பினும் அதுவும் நடக்கவில்லை.

    ஒவ்வொரு கேரக்டருக்கும் கமல் போட்ட மேக்கப் சில மணி நேரங்களே நீடிக்கும் என்பதால் ஒரு நாளைக்கு ஓரிரு காட்சிகளை மட்டுமே படமாக்க முடிந்ததால் இந்தத் தாமதம்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தசாவதாரம் ரிலீஸாகும் என கமல்ஹாசனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் உறுதியாக அறிவித்தனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், பட வேலைகள் அனைத்தும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருக்கின்றன. பொங்கலுக்குப் படம் வந்து விடும் என்று கூறியிருந்தார்.

    ஆனால் இப்போது படம் மேலும் தாமதமாகும் என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியஉள்ளார். அனேகமாக பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று படம் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, படத்ைத பொங்கலுக்கு கொண்டு வரும் நோக்கில் படு தீவிரமாக அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படம் முழுக்க வரும் கிராபிக்ஸ் வேலைகள்தான் நீண்டு கொண்டிருக்கின்றன.

    படத்ைத பக்காவாக கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார், தீவிரமாகவும் இருக்கிறார். கலைநயத்துடனும், அதி நவீன தொழில்நுட்பத்தின் முழுப் பிரதிபலிப்பும் படத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

    இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை இந்தியாவிலேயே இதுவரை எந்தப் படத்திற்கும் செய்யாத வகையில் 12 பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களிடம் பிரித்துக் கொடுத்துள்ளோம். ஸ்பெஷல் எபக்ட்ஸ் சிறப்பாக வர வேண்டும் என்பற்காக, இதற்கு மட்டுமே இதுவரை ரூ. 12 கோடியை செலவழித்துள்ளோம்.

    கிராபிக்ஸ் வேலைகள் முடிந்து விட்டால் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுவேன். பிப்ரவரி மாதம்தான் படத்தை ரிலீஸ் செய்ய சரியாக இருக்கும் என கருதுகிறேன். இதுகுறித்து கமல் சாருடனும் பேசி விட்டேன். அவருக்கும் அதில் சம்மதம்தான்.

    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1000 பிரிண்டுகள் போட தீர்மானித்துள்ளோம். மேலும் ஆங்கில சப் டைட்டிலுடன், உலகெங்கும் தசாவதாரம் திரையிடப்படும் என்றார் ரவிச்சந்திரன்.

    பசிக்குது, சீக்கிரம் தாங்க!

    Read more about: dasavatharam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X