twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி என்று தெரியாமல் அவரை வைத்துக் கொண்டே வாடா போடா என்று பேசிய டெல்லி கணேஷ் நண்பர்கள்

    |

    சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் என்ன சொல்லப் போகிறாய்.

    வயோதிகம் காரணமாக நிறைய படங்களை ஒப்புக்கொள்ளாத டெலிவினேஷ் அவர்கள் தற்சமயம் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் பற்றி இவர் கொடுத்துள்ள பேட்டி தற்சமயம் வைரலாகி உள்ளது

    சிவகார்த்திகேயன் போல பல நடிகர்கள் உருவாக இவர்தான் காரணம்..சக்ஸஸ் ஸ்டோரி சொல்லும் நடிகர் விஷ்ணு விஜய்சிவகார்த்திகேயன் போல பல நடிகர்கள் உருவாக இவர்தான் காரணம்..சக்ஸஸ் ஸ்டோரி சொல்லும் நடிகர் விஷ்ணு விஜய்

     ஏர்ஃபோர்ஸ் வேலை ராஜினாமா

    ஏர்ஃபோர்ஸ் வேலை ராஜினாமா

    1964 முதல் 1974 வரை டெல்லியில் இந்தியன் ஏர்போர்ஸில் பணியாற்றிய கணேஷ் அவர்கள் அங்கு மேடை நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தாராம். சினிமா மீதும் நடிப்பு மீதும் இருந்த ஆர்வத்தினால் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு வந்தவர் இன்றுவரை பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். டெல்லியில் இருந்து வந்ததாலேயே அவருடைய பெயர் டெல்லி கணேஷ் என்று ஆனது.

     மறக்க முடியாத கதாபாத்திரங்கள்

    மறக்க முடியாத கதாபாத்திரங்கள்

    டெல்லி கணேஷ் என்று சொன்னாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது கமல்ஹாசன் அவர்களுடைய திரைப்படங்கள்தான். மைக்கேல் மதன காம ராஜனாக இருக்கட்டும் அவ்வை சண்முகியாக இருக்கட்டும் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. அதேபோல நடிகர் ரஜினிகாந்துடன் அவர் நடித்த ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படமும் பிரபலமானது. நடிகர் விசு நடித்து இயக்கி இருந்த சிதம்பரம் ரகசியம் என்கிற படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பார். சங்கமம் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். சென்ற ஆண்டு மணிரத்தினம் தயாரித்திருந்த நவரசா என்கிற வெப் சீரிஸ் முன்னணி நடிகராகவும் நடித்திருந்தார். இவ்வாறு எந்த கதாபாத்திரத்திலும் ஜொலிக்கக் கூடியவர் டெல்லி கணேஷ்.

     முந்தானை முடிச்சு

    முந்தானை முடிச்சு

    முதன் முதலில் நடிகர் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த படம் மூன்று முடிச்சு. அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினிகாந்த். அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் வெளியே மக்கள் எப்படி தன்னை பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பாராம். அப்படி ஒரு முறை டெல்லி கணேஷ் நாடக ஒன்று சென்னையில் நடந்தபோது அதை பார்க்கச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். அந்தச் சமயத்தில் டெல்லியில் இருந்த கணேசனின் தமிழ் நண்பர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்களும் அந்த நாடகத்தை பார்க்க வந்திருந்தார்களாம்.

     வாடா போடா என்ற நண்பர்கள்

    வாடா போடா என்ற நண்பர்கள்

    நாடகம் முடிந்தவுடன், சென்னைக்கு வந்ததும் ஏதாவது படம் பார்த்தீர்களா என்று டெல்லி கணேஷ் அவர்களிடம் கேட்க, நாங்கள் வந்தால்தான் பாலச்சந்தரின் படம் பார்த்து விடுவோமே. முந்தானை முடிச்சு பார்த்தோம் என்று கூறி படத்தில் நடித்த ஒவ்வொருவரை பற்றியும் பாராட்டியவர்கள் ரஜினிகாந்தை பற்றியும் கூறினார்கள். டெல்லி கணேசனுடன் இருப்பது ரஜினிகாந்த் என்று அடையாளம் தெரியாமல், யாரோ ஒரு பையன் கருப்பா சிகரெட்டை தூக்கி போடறதும், ஸ்டைலா நடக்குறதும்னு இருக்காம்பா என்று வாடா போடா என்று பாராட்டினார்களாம். உடனே டெல்லி கணேஷ் அப்படியெல்லாம் பேசாதீர்கள் இவர்தான் அவர் என்று அறிமுகப்படுத்த சாரி சார் என்று மன்னிப்பு கேட்டார்களாம். பாராட்டும்போது அப்படித்தானே சொல்வார்கள். ஆண்டவனையே நாம் வாடா போடா என்றுதானே பேசுகிறோம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறினாராம். ரஜினிகாந்துடன் பழகிய ஒவ்வொரு நிமிடமும் அற்புதமானவை யார் மனதையும் புண்படுத்தாத மனிதர் ரஜினிகாந்த் என்று டெலிகணேசன் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

    English summary
    Without recognizing Rajinikanth who was with Delhi Ganesan at the set, people praised him about his style and mannerism. Immediately, Delhi Ganesh apologized and informed the crew , "Don't talk like that, this is Rajinikanth, sir."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X