Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஐசக்-ஹேமமாலினி புது வழக்கு
ஐசக்கிற்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது 2வது மனைவியாக கூறப்படும் ஹேமமாலினி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கோழிப்பண்ணை அதிபர் ஐசக், நடிகை தேவிப்பிரியா கல்யாண அறிவிப்பைத் தொடர்ந்து அவரது முதல் மனைவி ஸ்டெல்லா போலீஸில் பரபரப்பு புகார் கொடுத்தார். அடுத்து 2வது மனைவி ஹேமமாலினி புகார் கொடுத்தார்.தொடர்ந்து தேவிப்பிரியாவும், ஐசக்கும் தலைமறைவானார்கள். சமீபத்தில்தான் இருவரும் வெளியில் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக கல்யாணம் செய்து கொள்வோம். ஹேமமாலினி சமரசத்திற்கு வருகிறார் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஹேமமாலினி புது மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றம் ஐசக்கின் முன்ஜாமீன் மனுவை விசாரித்தபோது, எனது குழந்தையின் பெயரில் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறி 4 வாரம் அவகாசம் கொடுத்தது. ஆனால் அதன்படி ஐசக் செய்யவில்லை.
எனவே ஐசக்குக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.