twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் கொலையில் புது திருப்பம்: சங்கீதா தான் கொலையாளி?

    By Staff
    |

    

    Click here for more images
    சென்னை: சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு புதுமுக இயக்குநர் செல்வா கொலை செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பமாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட புதுமுக நடிகை சங்கீதாதான் செல்வாவைக் கொலை செய்தார் என்று சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னை வட பழனியில் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி தங்கியிருந்த அறையில் பிணமாகக் கிடந்தார் செல்வா. அவரை சிலர் கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீஸார், செல்வாவுடன் தங்கியிருந்ததாக கூறப்பட்ட, அவர் இயக்கி வந்த படத்தில் நடித்து வந்த நடிகை சங்கீதாவை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார் செல்வா. எப்போது பார்த்தாலும் செக்ஸ் வெறி பிடித்து திரிந்தார். படத்தை இயக்குவதை விட என்னை அனுபவிப்பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். ஒரு கட்டத்தில் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாததால் அடித்துக் கொன்று விட்டதாக சங்கீதா வாக்குமூலம் தந்ததாக போலீஸ் தரப்பில் செய்திகள் வந்தன.

    இதையடுத்து கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சங்கீதா ஜாமீனில் விடுதலையானார்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக, செல்வாவின் மனைவி மைதிலி, இந்த கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளது. எனவே இதை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.

    அவரது கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றியது.

    சிபிசிஐடி போலீஸார் மைதிலி சந்தேகம் தெரிவித்த படத் தயாரிப்பாளர் நடராஜன், செல்வாவின் தங்கை உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது.

    இதையடுத்து சங்கீதாவை மறுபடியும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டனர். ஆனால் விசாரணைக்கு வராமல் சங்கீதா தலைமறைவாகி விட்டார்.

    ஆனால் சமீபத்தில் விபச்சார வழக்கு ஒன்றில் சங்கீதா பிடிபட்டார். அந்த வழக்கிலும் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

    இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் சங்கீதாதான் இந்தக் கொலையை செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சங்கீதாவை விசாரணைக்கு வருமாறு சிபிசிஐடி போலீஸார் மறுபடியும் உத்தரவிட்டனர். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அவருக்கு கோர்ட் மூலம் பிடிவாரண்ட் பெறப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் சங்கீதா சரணடந்தார். இதனால் பிடிவாரண்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    சங்கீதாதான் குற்றவாளி என்று சிபிசிஐடி விசாரணையில் உறுதியாக தெரிய வந்திருப்பதால் விரைவில் புதிய குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்யவுள்ளனர்.

    Read more about: accused director sangeetha selva
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X