டைரக்ஷன் பண்ணு டைரக்ஷன் பண்ற மாதிரி நடிக்காத... "ஆண்பாவம்" இயக்குநருக்கு அறிவுரை வழங்கிய பாக்யராஜ்!
சென்னை: கன்னிராசி, ஆண்பாவம் போன்ற திரைப்படத்தின் வழியே இயக்குநர் "பண்டியராஜன்" திரைத்துறைக்கு அறிமுகமானவர். பாண்டியராஜ் இயக்கி நடித்த"ஆண்பாவம்" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
ஆண்பாவம் திரைப்படத்தின் மேக்கிங் பற்றி சுவாரசியமான தகவல்களை தனியார் தொலைக்காட்சி மேடையில் சொல்லியிருக்கிறார். இரவு 2 மணிக்கு பாக்யராஜிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த பண்டியராஜன், 'கன்னி ராசி' திரைக்கதையே ஒரு தயாரிப்பாளருக்கு சொல்லி படம் பண்ணும் முயற்சியில் இருந்திருக்கிறார். இந்த விஷயத்தை பாக்யராஜிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் ஒருநாள் இரவு 2 மணிக்கு பாக்யராஜ் தூங்கும்போது இதைப் பற்றி மிகவும் தயக்கத்துடன் அவரிடம் சொல்லி இருந்திருக்கிறார். இவ்வளவு நல்ல விஷயத்தை எதுக்குப்பா தயங்கி தயங்கி சொல்ற, நீ இப்ப தனியா படம் பண்ணுவது தான் சரி; என்று சொன்னதும், பண்டியராஜன் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு போது.

பாண்டியராஜனுக்கு அறிவுரை வழங்கிய 'பிரபு'
முதல் திரைப்படமான 'கன்னி ராசி' திரைப்படத்தில் பிரபு ஹீரோவாக நடித்திருப்பார். இந்தப் படம் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது ஆரம்பத்தில் பண்டியராஜன்சக நடிகர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கூட தெரியாமல், தேவை இல்லாத நேரத்தில் கூட சத்தம் போட்டு இருக்கிறார், இதைப் பார்த்த
பிரபு சூட்டிங் ஸ்பாட்டில் இந்த மாதிரி சக நடிகர்களிடம் சத்தம் போட்டு பேசக்கூடாது ஏதாவது சொல்லனும்னா தனியாக அழைத்து புரிகிற மாதிரி சொல்லுங்க என்று அவருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இயக்குநராக ஏற்றுக் கொள்ளாத சீதா
இயக்குநர் பாண்டியராஜனின் இரண்டாவது படமான "ஆண் பாவம்" திரைப்படத்தில் சீதாவை நடிகையாக அறிமுகப்படுத்தியிருப்பார்.
ஆரம்ப காலகட்டத்தில் இவரைப் பார்த்தால் ஒரு இயக்குநருக்கான ஏந்த ஒரு தோற்றமும் தெரியவில்லையே என்று சக நடிகர்களிடம் வேடிக்கையாக சொல்வது உண்டாம் சீதா.

ஆண்பாவம் திரைப்படம் வெற்றி பெற்றது
"ஆண்பாவம்"திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது, பரவாயில்லையே நாம் நடித்த முதல் திரைப்படமே இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்று மிகுந்த சந்தோஷத்தில் இருந்திருக்கிறார் நடிகை சீதா, இயக்குநர் பாண்டியராஜனை சந்தித்து இதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்த எல்லா நடிகர்களுக்கும் நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது, முக்கியமாக நடிகை சீதாவிற்கு நிறைய புதிய பட வாய்ப்புகளும் கிடைத்தது. இன்று வரை இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், இளையராஜாவின் பின்னணி இசையும் மக்களிடையே பேசப்படும் படமாக இருக்கிறது.

வெற்றி பெற்ற ஆண்பாவம்
"ஆண்பாவம்"திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது, பரவாயில்லையே நாம் நடித்த முதல் திரைப்படமே இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்று மிகுந்த சந்தோஷத்தில் இருந்திருக்கிறார் நடிகை சீதா, இயக்குநர் பாண்டியராஜனை சந்தித்து இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நடித்த அணைத்து நடிகர்களுக்கும் நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது, நாயகியாக அறிமுகமான சீதாவிற்கு இந்த பட வெற்றிக்கு பிறகு, பல புதிய பட வாய்ப்புகளும் கிடைத்தது. இந்த படம் இன்று வரை மக்களிடையே பேசப்படும் படமாக இருக்கிறது. இந்த சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் பாண்டியராஜன் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











