Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் விமலுக்கு முதல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது யாருனு தெரியுமா?இவர் எப்பவுமே ஸ்மார்ட் தான்!
சென்னை: நடிகர் விமல் 'பசங்க திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' திரைப்படம் பல விருதுகளை குவித்தது.
பசங்க படத்தில் நடிக்க நடிகர் விமலுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அனைத்து பாலிசியையும் மாற்றிய டாப் நடிகர்.. இந்த முறை பெரியளவில் புரமோஷன் பண்ண முடிவாம்!
சினிமாவில் வாய்ப்பு தேடும் நண்பர்கள்
நடிகர் விமல், விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றிருந்த காலகட்டத்தில், அவ்வபோது பல கம்பெனிகளை தேடி அலைவதும் அவர்கள் வைக்கும் ஆடிஷனில் கலந்து கொள்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படி ஒரு நாள் விஜய் சேதுபதி 'பசங்க' திரைப்படத்தின் ஆடிஷன் நடந்து கொண்டிருந்ததை அறிந்து அதில் கலந்திருக்கிறார். அந்தப் படத்தின் இயக்குநர் ஒரு சில அங்க அடையாளங்களை சொல்லி இந்த மாதிரி கேரக்டர் உள்ளவரை தான் நடிக்க வைப்பதாக உள்ளோம், என்று சொல்லி இருக்கிறார்.
விஜய்சேதுபதி விமலுக்கு பரிந்துரை செய்தார்
விஜய் சேதுபதி, விமலை தொலைபேசியில் அழைத்து இயக்குநர் சொல்வதை பார்த்தால் உன்னை மாதிரி ஒரு நடிகரை தான் தேடுவதாக தெரிகிறது, நீ போய் அந்த ஆடிஷனில் கலந்துக்கொள் கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
ஆடிஷனில் கலந்து கொண்ட விமல்
விமல் ஆடிஷனில் கலந்து கொண்ட போது மீசை, தாடி எல்லாம் சேவிங் செய்து இருந்ததை, பார்த்த இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் கேமராமேன் பிரேம்; இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மீசை, தாடியுடன் இருக்கிற ஒரு நபர் தான் தேவை என்று கூறியுள்ளனர்.
பின்பு கேமராமேன் பிரேமிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் மீசை தாடியுடன் நடித்த பிங்கோ விளம்பரத்தை காட்டி இருக்கிறார்; ஓ இது நீங்க தான என்று கேட்டு , இதை இயக்குநரிடம் காண்பித்த போது ஒரு 10, 15 நாட்கள் கழித்து மீசை, தாடி வளர்த்த பின்பு வர
சொல்லி இருக்கிறார்.
தயாரிப்பாளர் விமலுக்கு கொடுத்தா முதல் சம்பளம்
ஒரு 15 நாட்கள் கழித்து மீண்டும் இயக்குநரை சந்தித்தபோது ஒரு சில வசனங்களை கொடுத்து பேச சொல்லி இருக்கிறார்,
அவர் பேசியதை பார்த்த இயக்குநர், சரி ஓகே நீங்க தான் இந்த படத்தில் ஹீரோ என்று சொன்னவுடன்; தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் பிடித்து போய், விமலுக்கு எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சசிகுமார் 10 ஆயிரம் செக் கொடுத்திருக்கிறார்.'பசங்க' திரைப்படம் வெளியான பின்பு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பல விருதுகளை குவித்தது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!