Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'ஆச்சி'க்குப் பாராட்டு விழா!
மணிமகுடம் என்ற நாடகத்தின் மூலம் கலை உலகுக்கு அறிமுகமானவர் மனோரமா. 1957ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கைதான் மனோரமா நாயகியாக, நடிகையாக நடித்த முதல் திரைப்படம்.
இவர் திரையுலகிற்கு நடிக்கவந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளவர் மனோரமா தான். இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
ஹீரோயினாக அறிமுகமான மனோரமா பின்னர் குணச்சித்திர நடிகையாக, காமெடி அரசியாக பல அவதாரங்கள் எடுத்து உலகத் தமிழர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.
ஐந்து தென்னிந்திய முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமையும் ஆச்சிக்கு மட்டுமே உண்டு. பேரறிஞர் அண்ணாவுடன் நாடகம் ஒன்றில் ஜோடியாக நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதியுடனும் நாடகத்தில் ஜோடியாக நடித்துள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் 25 படங்களில் நடித்துள்ளார். அதேபோல ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆச்சி என்று திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்படும் மனோரமா, பத்மஸ்ரீ பட்டமும் பெற்றவர்.
1,500 படங்களுக்கு மேல் நடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளதையும், கலை உலகில் அவரின் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டியும் வரும் 14ம் தேதி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட ஒட்டு மொத்த திரையுலகினரும் திரண்டு வந்து ஆச்சியை பாராட்டி கெளரவிக்கவுள்ளனர்.
இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து மனோரமாவுக்கு நினைவுப் பரிசை வழங்க இருக்கிறார்கள்.
சாதகப் பறவைகள் இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதன் பின்னர் நமீதா, ப்ரியா மணி, சந்தியா, சங்கீதா, நிலா, தேஜாஸ்ரீ ஆகியோர் பங்கேற்கும் நடன விருந்து பரிமாறப்படவுள்ளது.
நடிப்புலகில் 'ஆட்சி' புரிந்து வரும் ஆச்சியை நாமும் பாராட்டுவோம்!