Just In
- 12 min ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 23 min ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 28 min ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 2 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Sports
பிவி சிந்து அசத்தல் வெற்றி.. தாய்லாந்து ஓபன் தொடரில் காலிறுதிக்கு முன்னேற்றம்!
- Automobiles
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகும் 'வாகை சூடவா' - 'வெடி'!
இன்று வெள்ளிக்கிழமை... வழக்கமாக பண்டிகை தினங்களில்தான் விசேஷமான படங்கள் வெளியாகும்.
ஆனால் இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் வெளியாகின்றன. ஒன்று களவாணி படம் மூலம் நம்பிக்கை இயக்குநராகத் திகழும் ஏ சற்குணம் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படைப்பான வாகை சூடவா.
இந்தப் படம் முழுக்க முழுக்க 1966-ம் ஆண்டின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால், நல்ல படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வாகை சூட வா-வுக்கு காத்திருக்கிறார்கள்.
விமல், இனியா நடித்துள்ள இந்தப் படத்தில், கே பாக்யராஜ் முக்கிய வேடமேற்றுள்ளார். படம் முழுக்க 60களின் பின்னணி என்பதால் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளார் சற்குணம். தமிழ் திரையில் ஒரு யதார்த்தமான படமாக இருக்கும் என்று, இந்தப் படத்தை முன்கூட்டியே பார்த்த சக இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான படம் வெடி. விஷால் - சமீரா நடித்துள்ள ஆக்ஷன் ரொமான்டிக் படம் இது. சவுரியம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது என்றாலும், படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தப் படங்கள் இரண்டுமே ஒன்றுக் கொன்று வித்தியாசமானவை என்பதால், ரசிகர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய திரைவிருந்தாக இவை அமையக்கூடும்.