Just In
- 6 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 37 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
Don't Miss!
- News
சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'அந்தக் கால சாக்லேட் பாய்..!' - ஜெமினி கணேசன் பிறந்ததின பகிர்வு
சென்னை : எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு பெரும் கலைஞர்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிபெற்றவர் ஜெமினி கணேசன்.
தனது அழகாலும், யதார்த்த நடிப்பாலும் பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக இருந்த ஜெமினி கணேசன் 'காதல் மன்னன்' என அழைக்கப்பட்டார். இப்போதைய 'அலைபாயுதே' வசனம் போல அப்போதே காதல் மன்னனின் வசனங்கள் பிரபலம்.
'மனம்போல மாங்கல்யம்', 'இரு கோடுகள்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்', 'பார்திபன் கனவு', 'களத்தூர் கண்ணம்மா', 'கற்பகம்', 'புன்னகை', 'பாசமலர்' போன்ற திரைப்படங்கள் இவரது அசாத்திய நடிப்பில் வெளிவந்து இன்றும் இவர் நடிப்புக்கு உதாரணம் சொல்ல வல்லன.

பல துறைகளில்
புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் சென்னையில் படிக்கும்போது பேச்சு, பாடல், விளையாட்டு என பல துறைகளிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். படித்து முடித்தபின் தான் படித்த சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். பிறகு சினிமா பக்கம் நாட்டம் ஏற்பட, ஜெமினி பட நிறுவனத்தில் மேனேஜராகச் சேர்ந்திருக்கிறார்.

ஜெமினி கணேசன்
1947-ம் ஆண்டு, தான் பணிபுரியும் ஜெமினி நிறுவன தயாரிப்பில் ‘மிஸ் மாலினி' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘தாய் உள்ளம்' என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெமினி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட அடையாளப் பெயர் பின்னாளில் அப்படியே நிலைத்துவிட்டது.

கதாநாயகன்
வில்லனாக நடித்த அடுத்த ஆண்டே, ‘பெண்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார் ஜெமினி. 1953-ல் வெளியிடப்பட்ட 'பெண்', எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ‘மனம்போல மாங்கல்யம்' என்ற திரைப்படத்தில், அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்று ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது.

சாவித்திரி
'மனம்போல மாங்கல்யம்' படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தவர் 'நடிகையர் திலகம்' சாவித்திரி. அவரையே பின்னாளில் ஜெமினி கணேசன் மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இப்படி, 'மனம்போல மாங்கல்யம்' படம் அவரது சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாது சொந்த வாழ்விலும் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிறகு, தனது படங்களில் ஏற்ற கதாபாத்திரங்களின் மூலம் 'காதல் மன்னன்' எனக் கொண்டாடப்பட்டார் ஜெமினி.
குணச்சித்திர நடிப்பு
1970-ம் ஆண்டு வெளிவந்த ‘லலிதா' என்ற திரைப்படமே ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த கடைசிப் படமாக அமைந்தது. அதன் பிறகு, தனது இறுதிக்காலம் வரை பிற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். கமல்ஹாசன், சிரஞ்சீவி, சத்யராஜ், விக்ரம், கார்த்திக் போன்ற பல நடிகர்களுடன் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார்.

200 திரைப்படங்களுக்கும் மேல்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார் காதல் மன்னன். 200 படங்களுக்கும் மேல் நடித்து அந்தக்கால ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் ஜெமினி. இவரது நடிப்புத் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழக அரசு கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும், மத்திய அரசு 'பத்மஶ்ரீ' விருதையும் அளித்து கௌரவப்படுத்திருக்கிறது.