Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
லேடி சூப்பர் ஸ்டார் டு தலைவி...! HBD நயன்தாரா #HBDNayanthara
சென்னை: டயானா மரியம் குரியன் எனும் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். முன்னெப்போதும் இல்லாத உச்ச நட்சத்திர அந்தஸ்துடன் இந்த ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நயன்தாரா.
பிறப்பால் மலையாளி என்றாலும் நயன்தாரா பிறந்தது கேரளாவில் அல்ல, கர்நாடகத்தில். 2003-ல் மனசினக்கர என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழுக்கு வந்தாய் அய்யா படம் மூலம். அடுத்த படத்திலேயே ரஜினிக்கு ஜோடியானார், சந்திரமுகியில். அன்றே உச்சத்துக்கும் போய்விட்டார்.
நம்பர் ஒன்
2005லிருந்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாகத் தொடர்கிறார் நயன்தாரா. இடையில் சிம்பு விவகாரத்தில் சில மாதங்கள் தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தவர், சிவாஜி, குசேலன் படங்களில் நடித்தார். அதன் பிறகு இன்று வரை நயன்தாராவின் ஆதிக்கம் தொடர்கிறது.
ரூட்ட மாத்து
கவர்ச்சி, நடிப்பு இரண்டிலுமே நயன்தாராவை மிஞ்ச ஆளில்லை. ஆனால் மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டார். விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த நானும் ரவுடிதான் கூட ஒருவகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைதான்.
அறம்
டோரா படத்தில் அவர்தான் ஆல் இன் ஆல். படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் மனம் தளரவில்லை. கோபி நயினார் கதையின் மீது நம்பிக்கை வைத்து அறம் படத்தில் நடித்தார். நயன்தாராவின் மேனேஜர் ராஜேஷ்தான் தயாரிப்பாளர் (அது பெயருக்குத்தான். உண்மையான தயாரிப்பாளர் யார் என்பதை யூகிக்க முடிகிறதல்லவா).
விஜயசாந்தி
அறம் படத்தில் நயன்தாராவின் தோற்றம், அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ள மெகா வெற்றி போன்றவை, இனி அவரது பாணி வேறு என்பதை உணர்த்தியுள்ளன. முன்பு தெலுங்கில் விஜயசாந்தி எப்படி தனி ஆதிக்கம் செலுத்தினாரோ, அந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டார் நயன்தாரா.
தலைவி
லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவரை இப்போது தலைவி என அழைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். நயன்தாராவுக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. அதை ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு போய் வந்தது, ஜெயலலிதாவைப் பார்க்கப் போனது, சமூகப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதன் மூலம் நிரூபித்துள்ளார். அறம் படத்திலும், நான் மக்களிடம் போகிறேன், அவர்கள் எனக்கு அதிகாரம் வழங்குவார்கள் என்றெல்லாம் வசனம் பேசியுள்ளார்.
ஜாதகம்
நயன்தாராவின் ஜாதகம் அரசியலுக்கு சாதகமாவே உள்ளதாம். அரசியலிலும் சினிமாவிலும் எப்போது, என்ன நடக்கும் என யார் கண்டார்கள். நல்லதே நடக்கட்டும். பிறந்த நாள் வாழ்த்துகள்!