Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமரசமாகும் காவேரி, வைத்தி
நடிகை காவேரி சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த ஒளிப்பதிவாளர் வைத்தி, தன்னை விட்டு விட்டு தனது மாமன் மகளை மணக்கப் போவதாகவும், அதை தடுத்து நிறுத்தி தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து சென்னை போலீஸார், வைத்தியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். வைத்தி தலைமறைவானார். தான் கைது செய்யப்படலாம் என்தால் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் வைத்தி.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வைத்தியைக் கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று நீதிபதி ரகுபதி முன்பு வைத்தியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைத்தி மற்றும் காவேரியின் சார்பில் வக்கீல்கள் ஆஜராகினர். காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், காவேரியின் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வருவதாக தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, காவேரி மற்றும் வைத்தியின் வக்கீல்கள் இருவரும் சமரசமாகப் போக சம்மதிப்பதாக தெரிவித்தனர்.
இவை அனைத்தையும் பதிவுசெய்து கொண்ட நீதிபதி, இருவரும் வருகிற 30ம் தேதி சமரச தீர்வு மையத்தை அணுக வேண்டும். அங்கு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.