Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோலிவுட் 'ஹோச முங்காரு'
ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மலைத் தொடர்களின் கிராமங்களில் அதிக அளவிலும் கோவை, திருப்பூர், பெங்களூர் போன்ற இடங்களிலும் விரவி வாழ்ந்து வரும் மக்கள் படுகர்கள்.
இந்த சமூகத்தைச் சேர்ந்த வெற்றிவேலன் என்பவர் முழுக்க முழுக்க படுகர் மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பெயர் ஹொச முங்காரு (புதிய வசந்தம் என்று அர்த்தமாம்).
இந்த சமூகத்தின் கலாச்சாரம், வாழ்வியல் குறித்து காதல் கலந்து சொல்லப் போகிறார் வெற்றிவேலன்.
எந்த மொழி மாற்றமும் ெசய்யாமல் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம்.
தமிழ்-மலையாளம் போல படுகர் மொழிக்கும் கன்னடத்துக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இதனால் இந்தப் படத்தை தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகத்திலும் திரையிட இருக்கிறார்.
படத்தை இயக்குவதோடு தானும் இதில் நடிக்கிறார் வெற்றி. இவர் தவிர நியாஷ் என்ற ஹீரோவும் இவர்களுக்கு ஜோடியாக பிரியா, சந்தியா ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களும் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே.
மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்களில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியுள்ள வெற்றிவேலன் இரு திரைப்பட இயக்குனர்களிடமும் உதவியாளராக இருந்துள்ளார். அந்த அனுபவத்தை வைத்து தனது தாய் மொழியில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்தின் இசையமைப்பாளர் முகேசும் கூட படுகர் இனத்தைச் சேர்ந்தவர் தான்.
இந்தி பேசும் வட மாநிலங்களில் பேசப்படும் போஜ்பூரி மொழியில் திரைப்படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது (இதில் தான் நம் நக்மா, ரம்பா எல்லாம் இப்போது காலத்தை ஓட்டி வருகின்றனர்).
அதே போல தமிழகத்தில் பேசப்படும் இன்னொரு மொழியில் சினிமா உருவாவது இதுவே முதல் முறை.