Don't Miss!
- Finance
உச்சத்தில் இருந்து பாதாளம் சென்ற 4 பங்குகள்... உங்களிடம் இருக்கா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடலாம்...
- News
அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சிட்டோம்.. ‘துரோகி, எதிரி’ - 2 பேரை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
- Sports
ஓய்வு பெறுகிறார் டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ்.. உருக்கமான பதிவு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!
- Automobiles
ஆகஸ்ட் 11, 15... காலாண்டர்ல நோட் பண்ணி வெச்சுக்கங்க... ரெண்டு தரமான சம்பவங்களை செய்ய மஹிந்திரா ரெடி!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
ஸ்கூல் படிக்கிறப்ப இந்த நடிகை பாக்குறதுக்காகவே ஹோட்டலுக்கு போவேன்...கார்த்தி சொன்ன செலிபிரிட்டி யார்?
சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இப்போது PS.மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விருமன் திரைப்படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். முதன் முறையாக முத்தையா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவ்விறு காரணங்களால் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உண்டாகியுள்ளது.
இந்நிலையில் கார்த்தி கொடுத்துள்ள ஒரு பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை கொடுத்துள்ளார்.
இது பிக் பாஸ் புரமோ இல்லை.. விக்ரம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? கமல் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!

கல்லூரியில் ராகிங்
கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த போது, தான் நடிகர் சிவக்குமாரின் மகன் என்று தெரிந்ததும், தன்னை சட்டை பட்டனை கழட்டிவிட்டு "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" பாடலுக்கு ஆடும்படி ராகிங் செய்ததாகவும், தனது தந்தை சிவக்குமார் நடனம் ஆடத் தெரியாமலேயே அந்தக் காலக்கட்டத்தில் சமாளித்ததாகவும், அதனை வீட்டில் கிண்டல் செய்வேன் எனவும் கார்த்தி கூறியுள்ளார்.

அமலா மீது கிரஷ்!
தன் தந்தை சிவக்குமாருடன் நடித்த நடிகைகளில் தனக்கு மிகவும் பிடித்த நடிகை அமலா எனவும், தான் பள்ளியில் படிக்கும்பொழுது அமலா ஒரு உணவகத்தை சென்னையில் நடத்திக் கொண்டிருந்ததாகவும், உணவு வாங்கும் சாக்கில் அமலாவை அடிக்கடி சென்று வேடிக்கை பார்த்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி சமீபத்தில் அமலாவை நேரில் சந்தித்தபொழுது, சிறு வயதில் நீ என் ஹோட்டலுக்கு வருவாய், ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டதாகவும், தான் ஒன்றும் தெரியாதது போல் நின்றதாகவும் கார்த்தி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

சிம்ரனா அல்லது ஜோதிகாவா
சிம்ரன் பிடிக்குமா அல்லது ஜோதிகா பிடிக்குமா என்று ஆன்கர் கேட்ட கேள்விக்கு தனது அண்ணி ஜோதிகாவின் நடிப்புதான் பிடிக்கும். மொழி திரைப்படம் ஒன்று போதும் அவர்களின் திறமையை நிரூபிக்க. வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகவில்லை. போதும் என்றுதான் தனது அண்ணி நடிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

அம்மாவின் கண்டிஷன்
நடிக்க வந்த புதிதில் எந்தப் பெண்ணையும் காதலிக்கக் கூடாது என்று ஒரு கண்டிஷன் போட்டுதான் அம்மா தான் நடிப்பதற்கு சம்மதித்ததாகவும், ஆறு ஆண்டுகளாக தனக்கு பெண் பார்த்து யாரும் செட் ஆகாததால் ஒரு கட்டத்தில், யாரையும் காதலிக்கிறாயா என்று கேட்டதாகவும், இதை முன்னரே சொல்லியிருந்தால் இந்நேரம் ஒரு பெண்ணை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருப்பேன் என்று ஆதங்கப்பட்டதாகவும் கார்த்தி அந்தப் பேட்டியில் கலகலப்பாக பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
-
கோலிவுட்டில் நெப்போடிஸம்னு சொன்னது சரிதான்..ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கருக்கு சான்ஸ்!
-
கேரளா நட்சத்திரங்களிடம் காணப்படும் இந்த தேசபக்தி.. தமிழக நடிகர்கள் இடையே இல்லையே, ஏன்?
-
‘கடாவர்’ 4 ஆண்டு கடினமான பணி..மார்ச்சுவரி டெக்னிஷ்யனாக நடிக்க கடுமையான ஹோம்வர்க் செய்தோம்..அமலாபால்!