Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரி செல்கிறார் இளையராஜா
நவம்பர் 27, 2003
200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரி செல்கிறார் இளையராஜா
மாணிக்கவாசகரின் திருவாசக இறை கீதங்களுக்கு சிம்பொனி இசையமைக்கும் முயற்சியில் இசைஞானி இளையராஜா ஈடுபட்டுள்ளார்.
இதற்கான இசைப் பதிவு ஹங்கேரியில் நடக்கவுள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜெர்மன் மொழிகளில் இந்த திருவாசக இசை வெளியிடப்படவுள்ளது.
இந்த ஆண்டிலேயே இதை வெளியிட்டுவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால், நிதி உள்ளிட்ட சில காரணங்களால் இந்தப் பணி தள்ளிப் போய்விட்டது. கிட்டத்தட்ட ரூ. 5 கோடி செலவு பிடிக்கும் திட்டம் இது.
திருவாசகத்துக்கு நான்கு மொழிகளிலும் இசை வடிவம் தரும் சிம்பொனி நோட்ஸ்களை ராஜா தயாரித்து முடித்துவிட்டார்.
இதையடுத்து ஒலிப் பதிவைத் துவக்கிவிடத் திட்டமிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் இந்த கம்போசிங் பணி நடக்கவுள்ளது.
ஜனவரியில் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் இந்த சிம்பொனி இசை வெளியிடப்படவுள்ளது.
ரெக்கார்டிங் ஹங்கேரியில் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடக்கவுள்ளது. இதற்காக சுமார் 200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரிக்கு செல்ல இருக்கிறார் இசைஞானி.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கேயே தங்கப் போகும் இளையராஜா, ஹங்கேரி நாட்டு இசைக் கலைஞர்களையும் கொண்டு இந்த சிம்பொனியை உருவாக்கி முடிக்கவுள்ளார்.
உலக அமைதிக்காக இந்த திருவாசக இசை யாகத்தை நடத்தும் இளையராஜா, இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சென்னையில் சர்வதேச இசைப் பல்கலைக்கழகம் அமைப்பதும், வட-கிழக்கு இலங்கையில் இசை- கலைக் கல்லூரி அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்துக்கான நிதி தமிழ் ஆர்வலர்கள், கோவில்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் திரட்டப்பட்டு வருகிறது.
|