இந்திய சினிமாவுக்கு வயது 100!

By Shankar

Raja Harishchandra 1913
இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது சினிமா. பொழுதுபோக்கு, வர்த்தகம், அரசியல், தேசப்பற்று என அனைத்துக்குமே சினிமா வேண்டும் இங்கு!

சினிமாவைக் கண்டுபிடித்த பெருமை வேண்டுமானால் வெளிநாட்டவர்களுக்கு சேரலாம். ஆனால் சினிமாவை வாழ வைப்பதில் முக்கிய பங்கு இந்தியர்களுக்குதான்.

சினிமா டிக்கெட்டுகளின் விற்பனை, மற்றும் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில், இந்திய சினிமாத்துறைதான் உலகிலேயே மிகப்பெரியது. ஆசியா-பசிபிக் பகுதியில் சினிமா பார்ப்பவர்களில் 73 சதவீதம் இந்தியர்களே.

இந்தியாவுக்கு 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி சினிமா அறிமுகமானது.

லூமியர் பிரதர்ஸ் சினிமாட்டோகிரபி என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டு, சினிமா பயணத்தைத் தொடங்கியது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது.

1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.

இவற்றிற்குப் பிறகுதான் முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா கடந்த மே 3, 1913-ம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இந்திய சினிமாத்துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே. அதனால்தான் அவர் பெயரில் சினிமாவுக்கான மிக உயர்ந்த விருது வழங்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் காட்சி அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.30 வரை திரையிடப்பட்டிருக்கிறது. அப்போதே இப்படத்தை தினசரி 4 காட்சிகள் ஓட்டியிருக்கிறார்கள்.

இன்றைய முழுநீளப்படங்களின் முன்னோடிப் படமான 'ராஜா ஹரிச்சந்திரா' வெளியாகி இன்றோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த சரித்திர நிகழ்வை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X