ரெடி ஆகிறார் ஜோ தான் நடித்து வரும் படங்களில் தன்னுடைய போர்ஷன்களை வேகமாக முடிக்குமாறுஇயக்குனர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார் ஜோதிகா. விரைவில் ஜோ,சூர்யா கல்யாண செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாம்.ரொம்ப காலமாக ரகசியமாக காதலித்து வந்த சூர்யா, ஜோதிகாவின் காதல், சிலகாலத்திற்கு முன்பு அம்பலமானது. அதற்கு முன்பு வரை நாங்களா, காதலர்களா என்றுகேட்டு வந்த சூர்யாவும், ஜோதிகாவும், நாளடைவில் மறுப்பை விட்டு விட்டுபுன்னகையை மட்டும் பதிலாக அளிக்க ஆரம்பித்தனர்.இருவரது காதலும் எல்லாப் பேருக்கும் தெரிந்து விட்டதால் இருவரையும் சேர்த்து பலபட விழாக்களில் காண முடிந்தது. ஃபிலிம் பேர் விருது விழாவில் கலந்து கொண்டுசிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய சூர்யா, எல்லாப் புகழும் ஜோவுக்கே என்றுபாராட்ட, ஜோ.வின் மகம் தாமரை போல சிவந்து மலர்ந்தது. பதிலுக்கு சூர்யாவைஅவரும் பாராட்டித் தள்ளினார். அதன் பிறகு இரண்டு பேருக்கும் ரொம்பத் தைரியம் வந்து விட்டது. விரைவில்எங்களுக்குக் கலய்ாணம் நடைபெறும் என்று ஜோதிகா ஓபனாகவேசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்பாடா ஒரு வழியாக ஒத்துக்கிட்டாங்கப்பா என்று அத்தனை பேரும் சந்தோஷநிம்மதியை அடைந்தனர்.எப்போ எப்போ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜோ, சூர்யா கல்யாணம் இப்போதுஒரு வழியாக முடிவாகி விட்டதாக உறுதியாகத் தெரிகிறது.இதற்கு முன்னோட்டமாக ஜோதிகா நடித்து வரும் படங்களின் ஷூட்டிங்கை வேகமாகமுடிக்குமாறு சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்களை ஜோதிகா கேட்டுக்கொண்டுள்ளாராம். ஜோ இப்போது மொழி, ஜில்லென்று ஒரு காதல், மணிகண்டா ஆகிய படங்களில்நடித்து வருகிறார். அதில் ஜில்லென்று ஒரு காதலில் ஜோவுக்கு ஜோடியாக நடிப்பவர்சூர் தான்.மணிகண்டாவில் அர்ஜூனுடன் நடிக்கிறார். மொழி, பிரகாஷ்ராஜின் சொந்தப்படம்.என் சம்பந்தப்பட்ட போர்ஷன்களை சீக்கிரம் முடிங்க என்று மூன்று படங்களின்இயக்குனர்களையும் கேட்டுக் கொண்டுள்ளாராம் ஜோ. அவர்களும் சந்தோஷமாகஓ.கே சொல்லி விட்டு படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார்களாம்.சூர்யா, ஜோ ஜோடி போடும் ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்பு தளமே படு கூலாகஇருக்கிறதாம். வெளியில் இந்தப் பூனையும் பீர் குடிக்குமா என்பது போல படுபவ்யமாக இருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும், ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்புஇடங்களில் படு ஜாலியாக அரட்டை அடிக்கிறார்களாம். ஆரம்பத்திலிருந்து இந்தக் காதலுக்கு எதிர்ப்பு வந்தவர்களில் முக்கியமானவர்சிவக்குமார். ஆனால் சிவக்குமாரின் மனைவி, சூர்யாவின் தம்பி, தங்கை ஆகியோர்ஜோவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.முரண்டு பிடித்து வந்த சிவக்குமாரை இயக்குனர் பாலாதான் பேசிப் பேசி வழிக்குக்கொண்டு வந்தாராம். ஒரு வழியாக சிவக்குமார் பச்சைக் கொடி காட்டி விடவே,விரைவில் டும் டும் செய்தி வெளியாகுமாம்.

By Staff

தான் நடித்து வரும் படங்களில் தன்னுடைய போர்ஷன்களை வேகமாக முடிக்குமாறுஇயக்குனர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார் ஜோதிகா. விரைவில் ஜோ,சூர்யா கல்யாண செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாம்.

ரொம்ப காலமாக ரகசியமாக காதலித்து வந்த சூர்யா, ஜோதிகாவின் காதல், சிலகாலத்திற்கு முன்பு அம்பலமானது. அதற்கு முன்பு வரை நாங்களா, காதலர்களா என்றுகேட்டு வந்த சூர்யாவும், ஜோதிகாவும், நாளடைவில் மறுப்பை விட்டு விட்டுபுன்னகையை மட்டும் பதிலாக அளிக்க ஆரம்பித்தனர்.

இருவரது காதலும் எல்லாப் பேருக்கும் தெரிந்து விட்டதால் இருவரையும் சேர்த்து பலபட விழாக்களில் காண முடிந்தது. ஃபிலிம் பேர் விருது விழாவில் கலந்து கொண்டுசிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய சூர்யா, எல்லாப் புகழும் ஜோவுக்கே என்றுபாராட்ட, ஜோ.வின் மகம் தாமரை போல சிவந்து மலர்ந்தது. பதிலுக்கு சூர்யாவைஅவரும் பாராட்டித் தள்ளினார்.


அதன் பிறகு இரண்டு பேருக்கும் ரொம்பத் தைரியம் வந்து விட்டது. விரைவில்எங்களுக்குக் கலய்ாணம் நடைபெறும் என்று ஜோதிகா ஓபனாகவேசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்பாடா ஒரு வழியாக ஒத்துக்கிட்டாங்கப்பா என்று அத்தனை பேரும் சந்தோஷநிம்மதியை அடைந்தனர்.

எப்போ எப்போ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜோ, சூர்யா கல்யாணம் இப்போதுஒரு வழியாக முடிவாகி விட்டதாக உறுதியாகத் தெரிகிறது.

இதற்கு முன்னோட்டமாக ஜோதிகா நடித்து வரும் படங்களின் ஷூட்டிங்கை வேகமாகமுடிக்குமாறு சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்களை ஜோதிகா கேட்டுக்கொண்டுள்ளாராம்.


ஜோ இப்போது மொழி, ஜில்லென்று ஒரு காதல், மணிகண்டா ஆகிய படங்களில்நடித்து வருகிறார். அதில் ஜில்லென்று ஒரு காதலில் ஜோவுக்கு ஜோடியாக நடிப்பவர்சூர் தான்.

மணிகண்டாவில் அர்ஜூனுடன் நடிக்கிறார். மொழி, பிரகாஷ்ராஜின் சொந்தப்படம்.

என் சம்பந்தப்பட்ட போர்ஷன்களை சீக்கிரம் முடிங்க என்று மூன்று படங்களின்இயக்குனர்களையும் கேட்டுக் கொண்டுள்ளாராம் ஜோ. அவர்களும் சந்தோஷமாகஓ.கே சொல்லி விட்டு படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார்களாம்.

சூர்யா, ஜோ ஜோடி போடும் ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்பு தளமே படு கூலாகஇருக்கிறதாம். வெளியில் இந்தப் பூனையும் பீர் குடிக்குமா என்பது போல படுபவ்யமாக இருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும், ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்புஇடங்களில் படு ஜாலியாக அரட்டை அடிக்கிறார்களாம்.


ஆரம்பத்திலிருந்து இந்தக் காதலுக்கு எதிர்ப்பு வந்தவர்களில் முக்கியமானவர்சிவக்குமார். ஆனால் சிவக்குமாரின் மனைவி, சூர்யாவின் தம்பி, தங்கை ஆகியோர்ஜோவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.

முரண்டு பிடித்து வந்த சிவக்குமாரை இயக்குனர் பாலாதான் பேசிப் பேசி வழிக்குக்கொண்டு வந்தாராம். ஒரு வழியாக சிவக்குமார் பச்சைக் கொடி காட்டி விடவே,விரைவில் டும் டும் செய்தி வெளியாகுமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X