Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தசாவதாரம் கதை: கமலுக்கு உத்தரவு
தசாவதாரம் படத்தின் கதை தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில்குமார் என்ற உதவி இயக்குநர், கமல்ஹாசன் நடிக்கும் தசாவதாரம் படத்தின் கதை தன்னுடையது. அதை திருட்டுத்தனமாக எடுத்து தசாவதாரம் படத்தை எடுத்து வருகின்றனர் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி, செந்தில்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார். இதையடுத்து செந்தில்குமார் பெஞ்ச் முன்பு மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் படத்தின் முழுக் கதையையும், யார் பெயரில் அந்தக் கதைக்கு காப்பிரைட் தரப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் கூறியிருந்த காலத்திற்குள் இவற்றை தயாரிப்பாளர் தரப்பு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கமல்ஹாசன் சார்பில் வக்கீல் சஞ்சய் ராமசாமி ஆஜரானார். படத்தின் முழுக் கதையையும் மனுதாரர் கோருவது நியாயமற்றது என்று அவர் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், படத்தின் முழு திரைக்கதையையும் தாக்கல் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் கமல்ஹாசனுக்கு உத்தரவிட்டனர்.
இந்தக் கதையின் நகலை மனுதாரருக்கு (செந்தில்குமாருக்கு) தருவது குறித்து ஆகஸ்ட் 7ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!
-
சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!