Just In
- 6 min ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 27 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 43 min ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
Don't Miss!
- Sports
பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு?
- News
போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆர்ப்பாட்டமே இல்லாமல் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் தேவ் ஆனந்த்- கமல் புகழாரம்
தேவ் ஆனந்த் மறைவு குறித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இறுதி வரை துடிப்புடன் நடித்து வந்தவர் தேவ் ஆனந்த். எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக மிக அமைதியாக அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகர் இவர் மட்டும்தான்.
திரையுலகில் அமைதியாக பெரும் சாதனைகள் பலவற்றைப் படைத்தவர் தேவ் ஆனந்த்தான். அவருடைய கைட் படமாகட்டும், பிற படங்களாகட்டும், அத்தனையுமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.
மிகப் பெரிய கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தேவ் ஆனந்த். அந்தக் குடும்பத்தை நல்வழிப்படுத்தி வழி நடத்திச் சென்றவர். அவர் நடித்த முதல் படத்திலும் சரி, கடைசிப் படத்திலும் சரி ஒரே மாதிரியாகத் தோன்றியவர். அந்தஅளவுக்கு ஹேர் ஸ்டைலிலும் உடைகளிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர்.
எனது மகாநதி படத்தைப் பார்த்து விட்டு கண்கலங்கிப் போனார் தேவ் ஆனந்த். இதை இந்தியில் எடுக்கலாமா என்று அவரிடம் நான் கேட்டபோது, இந்த அளவுக்கு இந்தியில் எடுக்க முடியுமா என்பது சந்தேகம் என்றார். அவரது மரணம் இந்தித் திரையுலகுக்கு மட்டுமல்ல, இந்தியத் திரையுலகுக்கே பெரிய இழப்புதான்.
கடைசி வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த நல்ல ஒரு நடிகர், நல்லதொரு தயாரிப்பாளர் தேவ் ஆனந்த். இன்னும் ஒரு வருடம் இருந்திருந்தால் இன்னும் ஒரு படத்தை கண்டிப்பாக எடுத்து விட்டுத்தான் போயிருப்பார். எனவே, மனிதனுக்கு ரிடையர்மென்ட் என்பது மரணம்தான் என்பதை தேவ் ஆனந்த் நிரூபித்திருக்கிறார் என்றார் கமல்ஹாசன்.