Don't Miss!
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆர்ப்பாட்டமே இல்லாமல் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் தேவ் ஆனந்த்- கமல் புகழாரம்
தேவ் ஆனந்த் மறைவு குறித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இறுதி வரை துடிப்புடன் நடித்து வந்தவர் தேவ் ஆனந்த். எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக மிக அமைதியாக அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகர் இவர் மட்டும்தான்.
திரையுலகில் அமைதியாக பெரும் சாதனைகள் பலவற்றைப் படைத்தவர் தேவ் ஆனந்த்தான். அவருடைய கைட் படமாகட்டும், பிற படங்களாகட்டும், அத்தனையுமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.
மிகப் பெரிய கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தேவ் ஆனந்த். அந்தக் குடும்பத்தை நல்வழிப்படுத்தி வழி நடத்திச் சென்றவர். அவர் நடித்த முதல் படத்திலும் சரி, கடைசிப் படத்திலும் சரி ஒரே மாதிரியாகத் தோன்றியவர். அந்தஅளவுக்கு ஹேர் ஸ்டைலிலும் உடைகளிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர்.
எனது மகாநதி படத்தைப் பார்த்து விட்டு கண்கலங்கிப் போனார் தேவ் ஆனந்த். இதை இந்தியில் எடுக்கலாமா என்று அவரிடம் நான் கேட்டபோது, இந்த அளவுக்கு இந்தியில் எடுக்க முடியுமா என்பது சந்தேகம் என்றார். அவரது மரணம் இந்தித் திரையுலகுக்கு மட்டுமல்ல, இந்தியத் திரையுலகுக்கே பெரிய இழப்புதான்.
கடைசி வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த நல்ல ஒரு நடிகர், நல்லதொரு தயாரிப்பாளர் தேவ் ஆனந்த். இன்னும் ஒரு வருடம் இருந்திருந்தால் இன்னும் ஒரு படத்தை கண்டிப்பாக எடுத்து விட்டுத்தான் போயிருப்பார். எனவே, மனிதனுக்கு ரிடையர்மென்ட் என்பது மரணம்தான் என்பதை தேவ் ஆனந்த் நிரூபித்திருக்கிறார் என்றார் கமல்ஹாசன்.