Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஸ்பெஷல்ஸ்
நடிகர் கமல்ஹாசன் தனது பிரமாண்டமான படைப்புக்கு விருமாண்டி என பெயர் சூட்டியுள்ளார். இதனை புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார்.
இந்த முன்னாள் சண்டியர் படத்தின் பாடல் கேசட் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. இதற்காக மாபெரும்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசனின் ரசிகர்கள்ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு படையெடுத்துள்ளனர்.
கமல்ஹாசன் தனது புதிய படைப்புக்கு சண்டியர் என்று பெயர் சூட்டியபோது புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், படப்பிடிப்பை நடத்த முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.இருப்பினும் சளைக்காத கமல்ஹாசன் படப்பிடிப்பை சென்னையில் வைத்தும், திருவள்ளூர் பகுதி கிராமங்களில்வைத்தும் எடுத்து முடித்துள்ளார்.
இந் நிலையில் படத்தின் பெயரை சொல்லாமல் படு ரகசியம் காத்து வந்த கமல் அதற்கு விருமாண்டி என்று பெயர்சூட்டிவிட்டார்.
இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல். இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகளை சென்னைகேம்பகோலா மைதானத்தில் வைத்து ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடுகிறார் கமல். இதற்காக பிரமாண்டவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கேசட்டை ஏவி.எம். சரவணன் வெளியிட இயக்குனர் கே.பாலச்சந்தர் பெற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சியில்பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட திரையுலக முக்கியஸ்தர்களும் கலந்து கொள்கின்றனர்.
சண்டியர் என்ற டைட்டிலை விட பல மடங்கு முறுக்கான விருமாண்டி பெயரை கமல்ஹாசன் வைத்துள்ளதாகதிரையுலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
கிருஷ்ணசாமி வரவேற்பு:
கமல்ஹாசன் படத்தின் புதிய பெயர் சூட்டல் குறித்து கருத்து தெரிவித்த கிருஷ்ணசாமி, கமலின் இந்த அறிவிப்பைவரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இது திரையுலகினரின் மன மாற்றத்துக்குக்கான முன் மாதிரியாக இருக்கும்என்று கருதுகிறேன் என்றார்.