Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான்...!'

எலந்தப் பயம், துள்ளுவதோ இளமை, பட்டத்து ராணி பார்க்கும் பார்வை உள்பட பல ஹஸ்க்கியான பாடல்களைப் பாடி பெரும் பிரபலம் ஆனவர் ஈஸ்வரி. இதே ஈஸ்வரி பாடிய வாராயோ தோழி வாராயோ என்ற அருமையான பாடல் இன்றளவும் திருமணக் கூடங்களில் முக்கியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பின்னாளில் அம்மன் பாடல்களுக்கு அக் மார்க் முத்திரையாக ஈஸ்வரியின் குரல் விளங்கியது. இப்படி எந்தப் பாடல் பாடினாலும் அதில் உச்சத்தைத் தொட்ட பெருமைக்குரியவர் ஈஸ்வரி. இந்த நிலையில் தற்போது அவரை குத்துப் பாட்டுகளுக்கு கூப்பிட ஆரம்பித்துள்ளனர்.
ஒஸ்தி பாடத்தில், அட்டகாசமான குத்துப் பாட்டுக்குக் குரல் கொடுத்த ஈஸ்வரிக்கு இப்போது குத்துப் பாடல்கள் பாட ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம். இந்த வயதில் இப்படி ஒரு வாய்ப்பா என்று அவரும் அசந்து போய்தான் நிற்கிறாராம். இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் தடையறத் தாக்க என்ற படத்தில் குத்துப் பாட்டுக்குப் பாடியுள்ளாராம் ஈஸ்வரி. தமன் இசையமைத்துள்ளார்.
பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான் என்று ஆரம்பிக்கும் இப்பாடலுக்கு செமத்தியான குத்தாட்டம் போடவிருப்பவர் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான தேபி தத்தா. நெய்யில் போட்டு முக்கி எடுத்த திராட்சைப் பழம் போல தகதகவென இருக்கிறார் தேபி தத்தா.
ஏற்கனவே இவர் பானா காத்தாடி, மங்காத்தா ஆகிய படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிய அனுபவம் கொண்டவர் தேபி. இப்போது தடையறத் தாக்க படத்திலும் தனது தகதக ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
இப்பாடலை ஈஸ்வரியுடன் சேர்ந்து அருண் விஜய் பாடியுள்ளார். தெலுங்குப் பட டான்ஸ் மாஸ்டரான நோபிள்தான் இந்தப் பாடலுக்கு பட்டையைக் கிளப்பும் வகையில் ஆட்டம் அமைத்துள்ளாராம்.
இப்பாடலின் மூலம் தேபி தத்தா எங்கேயோ போகப் போகிறார் என்கிறார்கள்.