Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாதுரி படம் - ஹூசேனின் 'பல்க்' புக்கிங்!
சில காலத்திற்கு முன்பு வரை பாலிவுட் ரசிகர்களை பைத்தியமாக்கிக் கொண்டிருந்தவர் மாதுரி தீக்ஷித். இவரது ஆட்டத்திற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உலகெங்கும் இருந்தனர். மாதுரியின் ஹம் ஆப் கே ஹெய்ன் கோன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகும்.
சில வருடங்களுக்கு முன்பு மாதுரி கல்யாணம் செய்து கொண்டு கணவருடன், அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவருக்கு அழகான ஒரு பையனும் இருக்கிறான்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மாதுரி. ஆஜா நாச்லே என்ற படத்தில் மாதுரி திறமை காட்டியுள்ளார். இப்படத்திற்கு மாதுரி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சற்றும் தனது ஸ்டைல் குறையாமல் இப்படத்தில் நடித்துள்ளாராம் மாதுரி.
ஆஜா நாச்லே இந்தியா மற்றும் உலகெங்கிலும் இன்று ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் மாதுரியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆஜா நாச்லேயை மற்ற ரசிகர்களை விட ஒரு படி மேலே போய் படு ஆரவாரமாக வரவேற்கக் காத்துள்ளார்.
மாதுரியின் தீவிர ரசிகரான ஹூசேன், ஹம் ஆப்கே .. படத்தை 50க்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசித்தவர். வெறித்தனமான ரசிகரான ஹூசேன், மாதுரியை வைத்து ஏகப்பட்ட ஓவியங்களையும் தீட்டியுள்ளார். அவரை வைத்து கஜ காமினி என்ற படத்தையும் தயாரித்தார்.
இந்த நிலையில் ஆஜா நாச்லே படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள ஹூசேன், துபாயில் இன்று வெளியாகும் இப்படத்தை, தானும், தனது முக்கிய நண்பர்களும் மட்டும் பார்ப்பதற்காக முதல் காட்சிக்கா அனைத்து டிக்கெட்டுக்களையும் வாங்கி விட்டாராம்.
தானும் மாதுரியும் இருக்கும் படத்தை வைத்து அழைப்பிதழையும் அடித்துள்ள ஹூசேன், அதை தனக்கு நெருக்கமான 193 பேருக்க மட்டும் கொடுத்து படம் பார்க்க வருமாறு அழைத்துள்ளாராம்.
இதைக் கேள்விப்பட்ட மாதுரி சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறாராம். எவ்வளவு பெரிய மனிதர் ஹூசேன், அவர் எனது படத்தின் டிக்கெட்டுக்களை வாங்கியிருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறாராம் மாதுரி.