Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திருட்டுக் கதையில் மம்முட்டி?!
மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் ஒரே கடல் படத்தின் கதை தனது கணவருடையது, அதைப் பயன்படுத்த உரிமை பெறப்படவில்லை என்று மறைந்த மலையாள எழுத்தாளர் குமரனின் மனைவி ருக்மணி குற்றம் சாட்டியுள்ளார்.
திருட்டுக் கதைகள் என்று கூறி முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிக்கல் எழுவது சகஜமாகி வருகிறது. முன்பு சந்திரமுகி படத்தின் கதை குறித்து பெரும் பிரச்சினை எழுந்தது.சமீபத்தில் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் கதை குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. சிவாஜி படத்தின் கதைக்குக் கூட ஒரு உதவி இயக்குநர் உரிமை கொண்டாடி வழக்கு போட்டுள்ளார்.
இந்த நிலையில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்து வரும் ஒரே கடல் படத்தின் கதை குறித்தும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஷ்யாமஇந்தப் படத்தின் கதை தனது கணவருடைய கதை என்று கூறியுள்ளார் பிரபல மலையாள எழுத்தாளர் குமரனின் மனைவி ருக்மணி. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவர் குமரன், மலையாளத்தில் பிரபலமான எழுத்தாளர்.
சில மாதங்களுக்கு முன்பு வங்க மொழி நாவலான ஹீராக் தீப்தி என்ற நூலை மலையாளத்தில் ஒரே கடல் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.
வங்க மொழி ஒரிஜினலில் இல்லாத சில விஷயங்களை மலையாள மொழிபெயர்ப்பில் சேர்த்திருந்தார் அவர்.
இப்போது எனது கணவர் எழுதிய ஒரே கடல் நாவலின் பெயரில் அதே கதையில் மம்முட்டியின் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்வது குறித்து என்னிடம் யாரும் அனுமதி பெறவில்லை.
எனது கணவர் இறந்து விட்டார். அவரது பெயரில்தான் காப்பிரைட் உரிமை உள்ளது. அவர் இறந்து விட்டதால், தானாகவே நான்தான் காப்பிரைட் உரிமையாளர். எனவே என்னிடம் கேட்காமல் கதையை பயன்படுத்திக் கொண்டது தவறு. இதுகுறித்து நீதிமன்றத்தை அணுகப் போகிறேன் என்று கூறியுள்ளார் ருக்மணி.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ