Don't Miss!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஸ்பெஷல்ஸ்
மணி ரத்னத்தின் அடுத்த படத்தில் மீரா ஜாஸ்மீன் நடிக்க உள்ளார்.
இரண்டு ஹீரோ சப்ஜெக்டான தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் மணி ரத்னம்.இரு ஹீரோக்களையும் புக் செய்துவிட்டார். ஸ்ரீகாந்த் மற்றும் தெலுங்கில் சமீபத்தில் அறிமுகமான நிதின்ஆகியோருக்கு அட்வான்சையும் கொடுத்துவிட்டார்.
இந் நிலையில் ஹீரோயின் சான்ஸ் மீரா ஜாஸ்மீனுக்கு அடிக்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கம் ஆசாமிகள். இதுகுறித்து மீராவுடன் மணிரத்னம் பேசிவிட்டதாகவும், உடனே மீரா தனது மலையாளத்து நண்பர் லோகிததாசுடன்பேசிவிட்டு வாய்ப்பை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் தெரிகிறது.
மணி ரத்னத்துக்காக தனது சம்பளத்தைக் கூட குறைத்துக் கொள்ள மீரா முன் வந்துள்ளாராம். இளமை பொங்கும்,கம்ப்யூட்டர் என்ஜினியர்களின் காதல் கதையாம். விரைவில் சூட்டிங்கைத் தொடங்க உள்ளார் மணி.
இது ஷகீலா நியூஸ்..
மலையாளத்தில் சுத்தமாக வாய்ப்புகளை இழந்துவிட்டார் ஷகீலா. ஆனால், சனிக்கிழமை இரவுகளில் ஒருமலையாள டிவியில் இவரது படங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை வந்த ஷகீலா படங்கள்எல்லாவற்றையும் காட்டிவிட்டார்கள். இப்போது ரிபீல் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு டிவியில் ஷகீலாவுக்கு மவுசு நிரந்தரமாகியுள்ளது. இதனால் அந்த டிவிக்காகவே படம் எடுக்கமுடிவு செய்துள்ள சில தயாரிப்பாளர்கள் ஷகீலாவைத் தேடிப் போக ஆரம்பித்துள்ளனர்.
வரும் வாய்ப்புகளை அள்ளிப் போட்டு மீண்டும் பலான படங்களில் நடித்து வருகிறாராம் ஷகீலா. டிவிக்கு விற்றதுபோக சில பிரிண்டுகளை தமிழகம், ஆந்திரத்துக்கும் அனுப்பி காசு பார்க்க முடிவு செய்துள்ளனர்தயாரிப்பாளர்கள்.
அதே நேரத்தில் அன்புத் தொல்லை படத்தையடுத்து மேலும் சில தமிழ் வாய்ப்புகளும் ஷகீலாவுக்கு வரஆரம்பித்துள்ளன. எல்லாமே அப்படி இப்படி கேரக்டர்கள் தான், ஆனாலும் தட்டிக் கழிக்காமல் அட்வான்ஸைவாங்கிக் கொள்கிறார்.