எம்ஜிஆர் - ரஜினிகாந்த்... ஒரு பாடலாசிரியரின் ஒப்பீடு இது!
திரையிலகில் இருந்து வந்தவர்களில் எம்ஜியாருக்குப் பிறகு
மக்களின் அபிமானத்தை பெற்றவர் என்றால் அது ரஜினி மட்டும்தான் .. இதில் மிகை ஏதுமில்லை!
இருவர் படங்களின் தலைப்புகளைப் பாருங்கள்...

எம்ஜிஆர் என்பது மூன்றெழுத்து
ரஜினி என்பதும் மூன்றெழுத்து
எம்ஜிஆர் சிறுவயதிலயே தந்தையை இழந்தவர்
ரஜினி சிறுவயதிலேயே தாய் தந்தை இழந்தவர்
எம்ஜியார் ஒரு தனிபிறவி
ரஜினி ஒரு அதிசய பிறவி
எம்ஜியாருக்கு ராஜராஜன்
ரஜினிக்கு ராஜாதி ராஜா
எம்ஜியாருக்கு மன்னாதி மன்னன்
ரஜினிக்கு மன்னன்
எம்ஜியாருக்கு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
ரஜினிக்கு பாண்டியன்
எம்ஜியாருக்கு தாய் சொல்லை தட்டாதே
ரஜினிக்கு தாய் மீது சத்தியம்
எம்ஜியாருக்கு தொழிலாளி
ரஜினிக்கு உழைப்பாளி
எம்ஜியாருக்கு நல்லவன் வாழ்வான்
ரஜினிக்கு நல்லவனுக்கு நல்லவன்
எம்ஜியாருக்கு உழைக்கும் கரங்கள்
ரஜினிக்கு துடிக்கும் கரங்கள்
எம்ஜியாருக்கு ஊருக்கு உழைப்பவன்
ரஜினிக்கு ஊர்க்காவலன்
எம்ஜியாருக்கு மதுரைவீரன்
ரஜினிக்கு மாவீரன்
எம்ஜியாருக்கு தலைவன்
ரஜினிக்கு தரமத்தின் தலைவன்
எம்ஜியாருக்கு வேட்டைக்காரன்
ரஜினிக்கு வேலைக்காரன் ...
எம்ஜியார் செத்து பிழைத்து மறுபிறவி எடுத்தவர் ...
அதேபோல ரஜினியும் செத்து பிழைத்து மறுபிறவி எடுத்துவந்தவர் ...
எம்ஜியாருக்கு உள்ள வெறித்தனமான ரசிகர் கூட்டம் போலவே ரஜினிக்கும் வெறித்தனமான பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
முதல்வராகும் முன்பே தான தர்மங்கள், கல்வி உதவிகள் செய்து வள்ளலாய் பெயரெடுத்தவர் எம்ஜிஆர். ரஜினியும் இலவச திருமணங்கள், பணியாளர்களுக்கு வீடுகள், மாணவர்களுக்கு கல்வி உதவிகள், ஏராளமான பண உதவிகள் என செய்து வருபவர். அதுவும் எந்த விளம்பரமும் இல்லாமல்!
எம்ஜியார் எப்படி பாட்டாளி பாமர மீனவ விவசாய மக்களின் பேராதரவோடு ஆட்சியை பிடித்தாரோ, அதேபோல ரஜினியும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதல்வர் ஆவார் !
- முருகன் மந்திரம்


Click it and Unblock the Notifications











