twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடவுள் வர்ராரு!

    By Staff
    |

    Bala with Arya
    ஒரு வழியாக கடவுளை கண்ணில் காட்ட முடிவு செய்து விட்டார் இயக்குநர் பாலா. பல மாதங்களாக அவர் இயக்கி வந்த நான் கடவுள், ஜனவரி 26ம் தேதி திரைக்கு வருகிறதாம்.

    பிதாமகனுக்குப் பிறகு பெரிய இடைவெளி விட்ட பாலா, அடுத்துத் தொடங்கிய படம் நான் கடவுள். ஆரம்பத்தில் அஜீத் நடிப்பதாக இருந்தது. ஆனால் டெர்ம்ஸ் சரிப்பட்டு வராததால் அஜீத்தை தூக்கி விட்டு ஆர்யாவை நாயகனாக்கினார். பின்னர் ஹீரோயின் சரிப்பட்டு வரவில்லை என்று பலமுறை பல நாயகிகளை மாற்றினார். இறுதியில் பூஜா செட்டிலானார்.

    இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இறுதிக் கட்ட வேலைகள் நட்து கொண்டுள்ளதாம்.

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் கடவுள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்ைத ஆரம்பத்தில் தயாரித்து வந்த தேனப்பன் விலகிக் கொண்டார். பிறகு பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், ஸ்ரீவரி சீனிவாசன் இப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார்.

    படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து வருவதால், பட ரிலீஸ் தேதி குறித்து பாலா பேசத் தொடங்கியுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று படம் திரைக்கு வரும் என்று பாலா கூறியுள்ளார்.

    பாலாவின் மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள நான் கடவுளில் ஆர்யா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். நாயகி பூஜாவுக்கும் படு வித்தியாசமான கேரக்டர்தான்.

    கடவுளை தரிசிக்க தயாராவோம்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X