Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்பெஷல்ஸ்
தமிழ் சினிமாவில் மீண்டும் நதியா அலை அடிக்க ஆரம்பித்துள்ளது.
பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மலையாள நதியாவுக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தனர் தமிழ் மக்கள்.பெருமளவில் ரசிகர்களைப் பெற்ற நதியா தமிழக மக்களிடையே பெரும் பாப்புலர் ஆனார்.
அவர் அணிந்து வரும் சேலை, சூடிதார், தோடு, வளையல் என அனைத்தும் கவனிக்கப்பட்டன. நதியா வளையல், நதியா சேலை,நதியா தோடு என நதியாவின் பெயரை வைத்து பல பொருட்களும் விற்பனையில் சக்கை போடு போட்டன.
புதுமுகங்களின் வரவால் நதியாவுக்கு வாய்ப்புகள் குறைந்தன. அத்தோடு கல்யாணம் செய்து கொண்டு திரையுலகுக்கு குட்பைசொல்லி விட்டு லண்டன் சென்று விட்டார் நதியா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரவியின் அம்மா வேடத்தில்நதியா நடித்திருந்தார்.
அன்னைக்குப் பார்த்தது போலவே இருக்கிறாரே என்று கூறும் அளவுக்கு இன்னும் அழகை தேக்கி வைத்துள்ள நதியாவுக்குஇப்போது பட வாய்ப்புகள் அதிகம் வருகிறதாம்.
அம்மா வேடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளீர்கள் என்று கூறி ஐஸ் வைத்து தங்களது படத்தில் நடிக்க கூப்பிடும்தயாரிப்பாளர்களிடம் 30 லட்சம் சம்பளமாக கேட்டு அதிர வைக்கிறாராம் நதியா.
உண்மையில் அவருக்கு நிறைய படங்களில் நடிக்க விருப்பம் இல்லையாம். நல்ல வேடமாக இருந்தால் மட்டுமே மீண்டும்நடிப்பேன் என்று கூறுகிறார் நதியா.
தற்போது சத்யராஜூக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க நதியா ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் அவரது தீவிர ரசிகர் சலபதி,நதியாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைக்க ஒரு கதை எழுதி, நல்ல தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறார்.
இதற்கிடையே நதியா ஒரு பேட்டியில், குடும்ப பொறுப்புகள் காரணமாகவே சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் நான் அதிகம்ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் லண்டனில் டிவி செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதால், கேமரா முன்நிற்பது, மேக்கப்போடுவது இரண்டும் என்னை விட்டு விலகவில்லை.
சாதாரணமாக அம்மா, அக்கா கேரக்டர்களில் வந்து போவதில் எனக்கு விருப்பமில்லை என்று தெளிவாக சொல்கிறார்.
-
எப்போதும் சியர் லீடராக இருப்பேன்.. சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!