Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகையை மணந்தார் நாக்ரவி!
சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்னேகாவுடன் இணைத்துப் பேசப்பட்டவர் நாக் ரவி. இருவருக்கும் கல்யாணம் ஆகப் போவதாகவும், திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால் திடீரென இந்த செய்தியையும், புகைப்படங்களையும் ஸ்னேகா மறுத்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை ஓய்ந்த சில மாதங்கள் கழித்து தனது சொந்த ஊரான மலேசியாவில் இருந்து சென்னைக்கு வேறு ரூபத்தில் அடியெடுத்து வைத்தார் நாக் ரவி.
சிறிய படத் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுத்து அவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவனாக மாறினார். அப்படியே பட வினியோகத்திலும் குதித்தார். சமீபத்தில் தனது இன்சைட் மீடியா நிறுவனத்தை பெரிய அளவில் சென்னையில் நிர்மாணித்தார். படத் தயாரிப்பிலும் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார்.
எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில், மச்சக்காரன் படத்தை திருட்டு வீடியோவில் பிடிக்க முயன்றதாக கூறி பிரச்சினையில் சிக்கினார். பின்னர் அதிலிருந்தும் தப்பினார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் திட்டமிட்டபடி, நிச்சயித்தபடி நாக் ரவிக்கும், கமல தீபிகாவுக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது.
கமல தீபிகா ஓரிரு படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது விமரிசையாக கல்யாணம் முடிந்துள்ளது.