Don't Miss!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பத்மா நண்பர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா?
நடிகை பத்மா நாராயனுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய், சந்திரன், அமீர்ஜான் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
ஆந்திராவைச் சேர்ந்தவரும், சென்னையில் வசித்து வருபவருமான தொழிலதிபர் பிரதீப் கொணேருவுடன் ஆபாச கோலத்தில் இருக்கும் காட்சிகளை வீடியோவில் படம் பிடித்து அவரிடம் காட்டி ரூ. 10 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்ததாக நடிகை பத்மா மற்றும் அவரது கூட்டாளிகளை போலிஸார் சமீபத்தில் கைது செய்தனர்.பத்மா குறித்து பல்வேறு பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் பத்மாவின் கூட்டாளிகள் 3 பேர் சார்பிலும் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது 3 பேருக்கும் ஜாமீன் கிடைக்குமா என்பது தெரிய வரும்.
ஏற்கனவே பத்மா சார்பில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
சஞ்சய்தான், பத்மா நாராயணன் தொழிலதிபர்கள், முக்கியப் புள்ளிகளின் வாரிசுகள் உள்ளிட்டோருடன் பத்மா குஜாலாக இருக்கும் காட்சிகளை சுடச் சுட வீடியோவில் பதிவு செய்தவர் ஆவார்.
மற்ற இருவருக்கும் பத்மாவின் லீலைகளில் நேரடித் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே இவர்கள் இருவருக்கும் நாளை ஜாமீன் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.