Don't Miss!
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'மிருகம்' - குஷியில் பத்மப்ரியா!
மிருகம் படத்தின் நாயகியான பத்மப்ரியா, அப்படத்தின் ஷூட்டிங்கின்போது பல சர்ச்சைகளைக் கிளப்பினார். இறுதியில், படப்பிடிப்பு முடியும் நிலையில் சரிவர நடிக்கவில்லை என்று கூறி இயக்குநர் சாமியால் கன்னத்தில் அறையப்பட்டார்.
இந்த விவகாரம் காரணமாக இயக்குநர் சாமிக்கு ஒரு ஆண்டு தடையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ளது. ஆனால் இதுகுறித்துக் கவலைபப்டவில்லை சாமி. திட்டமிட்டபடி படத்தை முடித்து திரைக்கும் கொண்டு வந்து விட்டார்.
படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது. பெண்கள் கூட்டம் குறைவாக இருப்பது மட்டும்தான் மிருகம் படத்தின் ஒரே குறை. ஆனால் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கருத்தை சாமி ஆணித்தரமாக சொல்லியிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில் மிருகம் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார் சர்ச்சை நாயகி பத்மப்ரியா. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப் படத்திற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் இயற்கையான மேக்கப்பில் நடித்தேன்.
இந்தக் கேரக்டருக்காக நான் எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன் என்பதை படத்தைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போது படம் நன்றாக வந்துள்ளது, நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பலரும் என்னை நடிக்க கூப்பிடுகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்றார் பத்மப்ரியா.
பத்மப்பிரியா நடிக்க வந்த முதல் படமான தவமாய் தவமிருந்துக்குப் பின்னர் சூப்பர் ஹிட் ஆகியுள்ள அவரது 2வது படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மிருகம் குறித்து சந்தோஷமாக கூறும் பத்மப்ரியா இயக்குநர் சாமி குறித்து மறந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தற்போது பத்மப்ரியா, அர்ஜூனுடன் துரை படத்தில் நடிக்கிறார். அதுகுறித்துத அவர் கூறுகையில், துரை போன்ற கமர்ஷியல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. மேலும் இதில் எனக்கு கலர்புல்லான கேரக்டரும் கூட.
எப்போதுமே நான் கிளாமர் ரோல்களில் நடிக்க மறுத்ததில்லை. துரை படத்தில் நான் டோட்டலாக மாறியிருப்பேன் என்றார் சந்தோஷத்தோடு.
இதுதவிர ஸ்டிரைக்கர் என்ற இந்திப் படத்திலும் நடிக்கிறாராம் பத்மப்ரியா. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது சித்தார்த். இது ஒரு செஸ் வீரர் குறித்த கதையாம்.