For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Finance HDFC வங்கி-யின் இன்ப அதிர்ச்சி.. லாபம், வருவாய் உடன் டிவிடெண்ட் அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பத்மாவுக்கு கல்தா இந்தி சூப்பர்பம்ப்கின் பத்மப்ரியா, தனுஷ் படத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு நழுவிப்போனதில் படா வருத்தத்தில் உள்ளார்.கன்னடத்தில் ஜோராக ஓடி வெற்றி பெற்ற படம் ஜோகி. அங்கெல்லாம் ஒரு படம் 20நாள் ஓடினாலே 100 நாட்கள் ஓடியதற்குச் சமம். அந்த அளவுக்கு அந்த மொழிப்படங்களுக்கு பேராதரவு கிடைக்கும்.அப்படிப்பட்ட நிலையில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்த ஜோகிதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனை செய்தது.சிவராஜ்குமார் மிக அருமையாக நடித்திருந்த அந்தப் படம் பல ரெக்கார்ட் பிரேக்குகள்செய்து வசூலை அள்ளி வருகிறது.அந்தப் படத்தைப் பத்தி இம்புட்டு நீளமாக பேசுவதற்குக் காரணம், தமிழில்ஜோகியைக் கொண்டு வரவுள்ளார்கள் என்பதைச் சொல்லத்தான். தனுஷ் நடிப்பில், ராஜு சுந்தரம் (நம்ம டான்ஸ் மாஸ்டரேதான்- இவருக்கு சொந்த ஊர்கர்நாடகம் தான்) இயக்கத்தில் ஜோகி தமிழில் தயாராகிறது.இதில், தனுஷுக்கு ஜோடியாகத்தான் நம்ம ஆத்தா பத்மப்பிரியாவைபோட்டிருந்தார்கள்.ஆனால் என்னாச்சோ, ஏதாச்சோ, இப்போது பிரியாவை தூக்கி விட்டார்களாம். புதுசாகஒரு குட்டியைத் தேடிக் கொண்டுள்ளார்கள். அனேகமாக கேரளாவிலிருந்து யாராவதுவந்து இறங்கலாம் எனத் தெரிகிறது. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே தன்னைநீக்கி விட்டதன் காரணம் தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார் பத்மப்பிரியா.ஆனால் பிரியா நீக்கத்திற்கு கோலிவிட்டில் வேறு காரணம் சொல்லப்படுகிறது.தனுஷுடன் சேர்ந்து பத்மப்பிரியா நடித்தால் அம்மா, புள்ளை மாதிரி திரையில்தெரிவார்கள். அதுவும் போக, பத்மப்பிரியாவுக்கு சுட்டுப் போட்டாலும் ஆட வராது, ஆனால்புள்ளை தனுஷுக்கோ ஆடாமல் இருக்க முடியாது.பத்மாவின் முகம் பூசணிக்காய் மாதிரி மொதமொதன்னு இருக்கு, தம்பியோவெடவெடன்னு இருக்காப்டி.இப்படி இருவருக்குமே எந்தப் பொருத்தமும் இல்லாததால் பத்மாவை தூக்கிவிட்டார்கள் என்கிறார்கள்.ஆனால் பத்மாவின் அடாவடியான பேச்சுதான் அவருக்கு கல்தா கொடுக்க காரணம்என்று முக்கியமான ஒரு இடத்திலிருந்து தகவல் வந்து சேர்ந்துள்ளது. எப்படியோவந்த வாய்ப்பை விட்டு விட்டார் பத்மா. தவமாய் தவமிருந்து, அடுத்து பட்டியல் என தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களில் நடித்து விட்டதால் பத்மாவுக்கு மெதப்பு வந்து விட்டதாம். இதனால்வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பித்துள்ளாராம்.இதனால் பத்மாவை அணுகவே நெறயப் பேர் யோசிக்கிறார்களாம்.பார்த்தும்மா பத்மாம்மா!
Specials
-Staff
By Staff
|
இந்தி சூப்பர்பம்ப்கின் பத்மப்ரியா, தனுஷ் படத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு நழுவிப்போனதில் படா வருத்தத்தில் உள்ளார்.கன்னடத்தில் ஜோராக ஓடி வெற்றி பெற்ற படம் ஜோகி. அங்கெல்லாம் ஒரு படம் 20நாள் ஓடினாலே 100 நாட்கள் ஓடியதற்குச் சமம். அந்த அளவுக்கு அந்த மொழிப்படங்களுக்கு பேராதரவு கிடைக்கும்.அப்படிப்பட்ட நிலையில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்த ஜோகிதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனை செய்தது.சிவராஜ்குமார் மிக அருமையாக நடித்திருந்த அந்தப் படம் பல ரெக்கார்ட் பிரேக்குகள்செய்து வசூலை அள்ளி வருகிறது.அந்தப் படத்தைப் பத்தி இம்புட்டு நீளமாக பேசுவதற்குக் காரணம், தமிழில்ஜோகியைக் கொண்டு வரவுள்ளார்கள் என்பதைச் சொல்லத்தான்.
தனுஷ் நடிப்பில், ராஜு சுந்தரம் (நம்ம டான்ஸ் மாஸ்டரேதான்- இவருக்கு சொந்த ஊர்கர்நாடகம் தான்) இயக்கத்தில் ஜோகி தமிழில் தயாராகிறது.இதில், தனுஷுக்கு ஜோடியாகத்தான் நம்ம ஆத்தா பத்மப்பிரியாவைபோட்டிருந்தார்கள்.ஆனால் என்னாச்சோ, ஏதாச்சோ, இப்போது பிரியாவை தூக்கி விட்டார்களாம். புதுசாகஒரு குட்டியைத் தேடிக் கொண்டுள்ளார்கள். அனேகமாக கேரளாவிலிருந்து யாராவதுவந்து இறங்கலாம் எனத் தெரிகிறது. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே தன்னைநீக்கி விட்டதன் காரணம் தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார் பத்மப்பிரியா.ஆனால் பிரியா நீக்கத்திற்கு கோலிவிட்டில் வேறு காரணம் சொல்லப்படுகிறது.தனுஷுடன் சேர்ந்து பத்மப்பிரியா நடித்தால் அம்மா, புள்ளை மாதிரி திரையில்தெரிவார்கள்.
அதுவும் போக, பத்மப்பிரியாவுக்கு சுட்டுப் போட்டாலும் ஆட வராது, ஆனால்புள்ளை தனுஷுக்கோ ஆடாமல் இருக்க முடியாது.பத்மாவின் முகம் பூசணிக்காய் மாதிரி மொதமொதன்னு இருக்கு, தம்பியோவெடவெடன்னு இருக்காப்டி.இப்படி இருவருக்குமே எந்தப் பொருத்தமும் இல்லாததால் பத்மாவை தூக்கிவிட்டார்கள் என்கிறார்கள்.ஆனால் பத்மாவின் அடாவடியான பேச்சுதான் அவருக்கு கல்தா கொடுக்க காரணம்என்று முக்கியமான ஒரு இடத்திலிருந்து தகவல் வந்து சேர்ந்துள்ளது. எப்படியோவந்த வாய்ப்பை விட்டு விட்டார் பத்மா.
தவமாய் தவமிருந்து, அடுத்து பட்டியல் என தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களில் நடித்து விட்டதால் பத்மாவுக்கு மெதப்பு வந்து விட்டதாம். இதனால்வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பித்துள்ளாராம்.இதனால் பத்மாவை அணுகவே நெறயப் பேர் யோசிக்கிறார்களாம்.பார்த்தும்மா பத்மாம்மா!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actors actress aneesha bhavana charmi chaya deepthi gowtham jyothika kalyani laila mamtha meera nisha padmapriya taken off from dhanush film padmini payal radha ranjitha shakeela
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004