Don't Miss!
- News லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பூனைகள் இல்லாத வீடு!
அமீரின் ராம் மற்றும் பருத்தி வீரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சந்திரா. மீடியாவில் இருந்து வந்தாலும் கூட, அவரது தாகம் இலக்கியம்தான். வி.கே.சுந்தரின் ஒத்துழைப்புடன் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார் சந்திரா.
தற்போது தனது சிறுகதைகளைத் தொகுத்து பூனைகள் இல்லாத வீடு என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கரு. பழனியப்பன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சாருநிவேதிதா பேசுகையில், தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு நூலை இப்போதுதான் படிக்கிறேன். சந்திராவின் எழுத்து பாணி சிறப்பாக உள்ளதாக பாராட்டினார்.
தனது உயிர்மை பதிப்பகம் சார்பில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.
காலச்சுவடு அறக்கட்டளை, புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்திய பெண்களுக்கான எழுத்துப் போட்டியில் சந்திராவுக்கு 2வது பரிசு கிடைத்தது. இந்த விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கோவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த விழாவில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.