குழந்தையை தரக் கோரி பிரஷாந்த்br/வழக்கு - அக். 5க்கு ஒத்திவைப்பு
தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி கிரகலட்சுமி மீது பிரஷாந்த் தொடர்ந்துள்ள வழக்கு அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நடிகர் பிரஷாந்த், தனது குழந்தையை மனைவி கிரகலட்சுமியிடமிருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி விடுமுறை என்பதாலும், கிரகலட்சுமி தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்படாததாலும் வழக்கு விசாரணை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கையொட்டி பிரஷாந்த்தும், கிரகலட்சுமியும் தனித் தனியாக நீதிமன்றத்திற்கு தங்களது வக்கீல்களுடன் வந்திருந்தனர். தனது இந்த மனுவில், தனக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த கல்யாணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் பிரஷாந்த் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











