Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ப்ரீத்தியின் புதிய படங்கள்
காதலனிடம் அந்நியோன்யமாக ப்ரீத்தி வர்மா இருப்பது போன்ற புகைப்படங்கள் போலீஸ் கையில் சிக்கயுள்ளது.
கிளாமர் ரோல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ப்ரீத்தி வர்மா, கடந்த மாதம் 11ம் தேதி ராஜமுந்திரியில் தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென காணமால் போய் விட்டார்.அவர் காணாமல் போணது முதல் பல்வேறு குழப்பங்கள், சர்ச்சைகள், பரபரப்புகள் ஏற்பட்டு விட்டன. இந்த வழக்கை கே.கே.நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு மருத்துமனையில் ப்ரீத்தி வர்மா, மன நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதை போலீஸார் மறுத்து விட்டனர்.
விரைவில் ப்ரீத்தி கண்டிபிடிக்கப்படுவார் என்று மட்டுமே சொல்லி வரும் போலீஸார் அது குறித்து மேற்கொண்டு எந்தத் தகவலையும் தர மறுக்கிறார்கள். இந்த நிலையில் ப்ரீத்தி வர்மா தனது வழக்கறிஞர் மூலம் ஒரு கடிதத்தை போலீஸாருக்கு அனுப்பியுள்ளார்.
அதில், ப்ரீத்தியின் படம் உள்ளது. அக்கடிதத்தில் தான் மும்பையில் நலமுடன் இருப்பதாகவும், என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ப்ரீத்தி.
இந்த நிலையில் மேலும் சில புகைப்படங்கள் போலீஸாருக்கு சிக்கியுள்ளது. அந்தப் படத்தில் ப்ரீத்தியின் காதலரும் உள்ளார். ப்ரீத்தியும், அவரும் படு நெருக்கமா, படு அந்நியோன்யமாக உள்ளார் ப்ரீத்தி. இந்தப் படங்களையும் ப்ரீத்தியே அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ப்ரீத்தியை தனது மடியில் கிடத்திக் கொண்டு ஜஸ் க்ரீம் ஊட்டுவது போலவும், இன்னும் சில காரியங்களை செய்வது போலவும் அந்தப் படத்தில் ப்ரீத்தியும், அவரது காதலரும் உள்ளனர்.
மேலும் ராஜமுந்திரியில் ப்ரீத்தி படப்பிடிப்பில் இருந்தபோதும் இந்த நபர் அங்கு வந்து ப்ரீத்தியிடம் பலமுறை பேசியுள்ளாராம். இதைப் படப்பிடிப்பில் உள்ளவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தாய்மாமா என்று சொல்லிக் கொண்டு வருவாராம் அந்த மர்ம நபர்.
போலீஸாரின் சந்தேக வலைக்குள் இந்த நபரும் இருப்பதால் அவரைப் பிடித்து விசாரிக்க போலிஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.