Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார்!
திருமலை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதன்கிழமை திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவர் காணிக்கையாக துலாபாரம் செலுத்தினார்.
ஏழுமலையானின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். அவர் சமீபத்தில் உடல்நலமில்லாமல் சிகிச்சைப் பெற்று, மீண்டும் பழையபடி ஆரோக்கியத்துக்குத் திரும்பினார்.
தனது உடல்நிலை சீரானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் புதன்கிழமை திருமலைக்குச் சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோரும், ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபுவும் சென்றிருந்தனர்.
அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் இரவு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ வரவேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அழைத்து சென்றார்.
திருமலையில் ரஜினிக்காக சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலில் துலாபாரம் செலுத்தினார் ரஜினி.
லதா மொட்டை
பேரன் லிங்காவுக்கு முடிகாணிக்கையும் செலுத்தினர். ரஜினி மனைவி லதாவும் கணவருக்காக திருமலையில் முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் அரைமணி நேரம் அங்கிருந்த ரஜினி மற்றும் குடும்பத்தினர் பின்னர் சென்னை திரும்பினர்.
கடந்த ஆண்டு இளையமகள் சௌந்தர்யா திருமணம் முடிந்தபிறகு திருமலைக்கு வந்திருந்தார் ரஜினி. அதன் பிறகு இப்போதுதான் வருகிறார். இடையில் சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவும் அவர் கணவர் அஸ்வினும் திருமலைக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்பா விரைவில் திருமலைக்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவார் என்று அப்போது சௌந்தர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!