Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்பெஷல்ஸ்
ரஜினியின் ஜக்குபாய் கதை விவாதம் பாதியில் திடீரென நிறுத்தப்பட்டு, அந்தரத்தில் விடப்பட்டநிலையில், அந்தப் படம் அடுத்த நிலைக்கு நகருமா என்பதே இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.
படப்பிடிப்பு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று பல மாதங்கள் பின் தள்ளப்பட்டு இப்போது அடுத்தஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.
கதாநாயகியாக ஐஸ்வர்யாவே நடிக்க வேண்டும் என்று ரஜினி விரும்புவதால், அவரது கால்ஷீட்அட்ஜஸ்ட்மெண்ட்டுக்காக படப்பிடிப்பு தள்ளிப் போனதாக முதலில் சொல்லப்பட்டது.
ஐஸ்வர்யா ரொம்பவே பிஸி என்பதாலும், அவர் மிகவும் பிகு செய்வதாலும் பூமிகாவைஹீரோயினாக்கி செப்டம்பரில் சூட்டிங்கைத் தொடங்கிவிடலாம் என இயக்குனர் ரவிக்குமார்யோசனை சொல்ல பூமிகாவிடம் கால்ஷீட் பெறப்பட்டது.
இந் நிலையில் திடீரென கதை விவாதத்தையே நிறுத்தச் சொல்லிவிட்டார் ரஜினி. பெங்களூரில்வைத்து ஸ்கிரிப்ட் பில்ட்-அப்பில் இருந்த கே.எஸ்.ரவிக்குமாரும், ரமேஷ் கண்ணா உள்ளிட்டஅவரது அசிஸ்டெண்ட்களும் அந்தப் பணியை அப்படியே நிறுத்திவிட்டனர். (இப்படி ஜக்குபாய்கதை விவாதம் நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்)
இப்போதைக்கு நேரம் சரியில்லை என்பதால், பூஜை புனஸ்காரங்கள், ஆலய வழிபாடுகளைமுடித்துவிட்டு சூட்டிங்கை ரஜினி தொடரத் திட்டமிட்டுள்ளதாக, கதை விவாத நிறுத்தத்துக்குக்காரணமும் சொல்லப்பட்டது.
இது இப்படி இருக்க தில், தூள், கில்லி என சொல்லி வைத்து வரிசையாக ஹாட்ரிக் வெற்றிப்படங்களைத் தந்துள்ள தரணி திடீரென ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளாராம். ரஜினியின்அழைப்பின் பேரிலேயே இச் சந்திப்பு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.
கே.எஸ்.ரவிக்குமாரை கழற்றிவிட்டு, தனது அடுத்த படத்தை தரணியை வைத்து ரஜினி எடுக்கப்போவதாக கோடம்பாக்கததில் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே ரெடியான ஜக்குபாய் கதையைதரணியிடம் ரஜினி கூறியதாகவும், அதையே கொஞ்சம் மாற்றி எடுக்கலாம் என தரணி யோசனைசொன்னதாகவும் தெரிகிறது.
அதே நேரத்தில் ரஜினிக்காக புதுக் கதை ஒன்றையும் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம் தரணி.
கே.எஸ்.ரவிக்குமார் தரப்பில் கேட்டால், ஜக்குபாய் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில்தொடங்கும் என்று செய்தி கசிய விடுகிறார்கள். இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால், தரணியைவைத்து ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அப்புறமாக ஜக்குபாய் பக்கமாக ரஜினி வரலாம் என்றுதெரிகிறது.