Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சோனியா பார்க்கும் மிஷன் 90
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள மலையாளப் படத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குப் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்துள்ளார் அப்படத்தை இயக்கியுள்ள மேஜர் ரவி.
ராணுவ அதிரடிப்படையில் இருந்தவர் மேஜர் ரவி. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிரடிப்படையில் இவரும் இடம் பெற்றிருந்தார். பெங்களூரில் ஒற்றைக் கண் சிவராசனும், சுபாவும் மறைந்திருந்த வீட்டை முற்றுகையிட்ட அதிரடிப்படையில் ரவியும் இடம் பெற்றிருந்தார்.அப்போதைய தனி விசாரணைப் படைத் தலைவர் கார்த்திகேயன் செய்த தாமதத்தால்தான் சிவராசனை உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தர் ரவி என்பது நினைவிருக்கலாம்.
ரவி இப்போது ஒரு சினிமா இயக்குநர். அவர் இயக்கிய முதல் படம் அரண். இப்படத்தில் ஜீவா, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் ரிலீஸானது.
இந்த நிலையில், மிஷன் 90 டேஸ் என்ற பெயரில் புதிய மலையாளப் படம் ஒன்றை இயக்கியுள்ளார் ரவி. இப்படம், பெங்களூரில் சிவராசனைப் பிடிக்க நடந்த போராட்டத்தின்போது நடந்த சம்பவங்களின் அடிப்படையில், இப்படத்தை இயக்கியுள்ளார் ரவி.
இதுதவிர ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான முக்கிய அம்சங்களையும் இந்தப் படத்தில் இணைத்துள்ளாராம் ரவி. கடந்த வாரம் இப்படம் கேரளாவில் ரிலீஸானது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருப்பது பாலிவுட்டின் துலிப் ஜோஷி. தமிழில் அர்ஜூனுடன் ஒரு படத்தில் நடிக்க வந்து பாதியிலேயே ஓடிப் போனவர் தான் இந்த ஜோஷி (என்ன காரணமோ.. அர்ஜூனுக்கே வெளிச்சம்)
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இப்படத்தைப் போட்டுக் காட்டவுள்ளார் ரவி. சோனியா காந்தி படத்தைப் புரிந்து கொள்ள வசதியாக, ஆங்கில சப் டைட்டிலுடன் படம் அவருக்குக் காட்டப்படவுள்ளது.
இப்படம் குறித்து ரவி தட்ஸ்தமிழ் நிருபரிடம் கூறுகையில், இந்த வாரக் கடைசியில் சோனியாவுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, ரவி முன்பு இயக்கிய அரண் (மலையாளத்தில் கீர்த்தி சக்ரா) படத்தின் 2வது பகுதியை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் ரவி. காந்தஹார் விமானக் கடத்தலை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கப் போகிறாராம். ஆனால் இப்படத்தில் அரண் படத்தில் நடித்த ஜீவா இல்லையாம்.