Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெலுங்கில் ராஜ்கிரண்
ஏற்றிய வேட்டியும், இறக்கிய அண்ட்ராயருமாக தமிழ் திரையுலகைக் கலக்கி வந்த ராஜ்கிரண் அடுத்து தெலுங்கையும் ஒரு கை பார்க்க ஹைதராபாத்துக்கு வண்டி ஏறுகிறாராம்.
தமிழ் சினிமா ஹீரோக்களுக்கே உரிய எந்த லட்சணமும் இல்லாமல், இப்படியும் ஒரு ஹீரோவா என்று ஆச்சரியப்படும்படியான வித்தியாச உருவத்துடன் திரைக்கு வந்து பட்டையைக் கிளப்பியவர் ராஜ்கிரண்.அவருடைய முரட்டுத்தனமான தோற்றத்துக்கேற்றார்போல கேரக்டர்களை செலக்ட் செய்து தூள் கிளப்பியவர் ராஜ்கிரண். ராமராஜனுக்குப் பிறகு ராஜ்கிரணுக்கு அதிக ரசிகர்கள் இருந்தது ஒரு காலம். கோடியில் சம்பளம் பார்த்த வித்தியாச ஹீரோக்களில் இவரும் ஒருவர்.
காலப்போக்கில் ராஜ்கிரண் மேகம் விலகி பல்வேறு ஹீரோக்கள் உள்ளே புகுந்து ராஜ்கிரணுக்கு இடம் இல்லாமல் செய்து விட்டனர். வயதும் போய் விட்டதால், ஹீரோவாக நடிக்க முயலவில்லை ராஜ்கிரண்.
இந்த நிலையில்தான் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரணுக்கு அருமையான கேரக்டர் கிடைத்தது. கிட்டத்தட்ட சேரனின் தந்தை வேடத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார் ராஜ்கிரண்.
இதையடுத்து சடசடவென வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் எல்லாவற்றையும் பொறுக்காமல் பார்த்துப் பார்த்து நடிக்க ஆரம்பித்தார் ராஜ்கிரண். அப்படியும் கூட முனி படம் அவருக்கு இறக்கத்தைக் கொடுத்து விட்டது.
இந்த நிலையில் மீண்டும் டைரக்ஷனுக்குத் திரும்பப் போகும் ராஜ்கிரண் அடுத்து தெலுங்கிலும் புகுந்து கலக்கவுள்ளாராம்.
தெலுங்கில் ராஜ்கிரணுக்கு நல்ல கிராக்கி உள்ளது. அவருக்கேற்ற வேடங்களும் வரிசை கட்டி வருகின்றனவாம். இதனால் தெலுங்கிலும் நடிக்கத் தீர்மானித்து விட்டார் ராஜ்கிரண். தெலுங்கு ஓரளவு பேசத் தெரியும் என்பதால், சொந்தக் குரலிலேயே பேசவும் தீர்மானித்துள்ளாராம் ராஜ்கிரண்.
சீக்கிரமே, வேட்டி, அண்ட்ராயர்களை அயர்ன் செய்து எடுத்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வண்டி ஏறப் போகிறாராம் ராஜ்கிரண்.
-
எப்போதும் சியர் லீடராக இருப்பேன்.. சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!