Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை காவேரியை கைவிட்ட கணவர்-கற்பழிப்பு வழக்கு பதிவு
Click here for more images |
வைகாசி பொறாந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காவேரி. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இளம் நடிகையான அவர் இப்போது அக்கா, அம்மா கேரக்டர்களில் நடிக்கிறார்.
ஒரு வருடத்துக்கு முன் ஒளிப்பதிவாளர் வைத்தீஸ்வரனை ரகசிய திருமணம் செய்தார் காவேரி. இந்தத் திருமணம் முறைப்படி நடக்கவில்லை. ஆனாலும் அவருடன் தான் குடும்பம் நடத்தி வந்தார்.
இப்போது காவேரி கர்ப்பமாக இருக்கம் நிலையில் காவேரி கைவிட்டுவிட்டு தனது தாய்மாமன் மகளை செய்யவுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திருமணம் நாளை நடக்கவுள்ளதாக தெரியவந்ததையடுத்து போலீஸ் கமிஷனரை சந்தித்த காவேரி புகார் அளித்தார். அந்தத் திருமணத்தை தடுக்குமாறு ேகாரியுள்ளார்.
வைத்தீஸ்வரன் கோலிவுட்டின் பிஸியான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அவர் சமீபத்திய படங்களான மருதமலை, மலைக்கோட்டை ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
காவேரி அளித்த புகாரையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் வைத்தீஸ்வரனுக்கும் அவரது மாமாவின் மகளுக்கும் நாளை திருச்சி அருகே உள்ள கீரனூரில் திருமணம் நடக்க இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வைத்தீஸ்வரன் மீது கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வைத்தீஸ்வரனை கைது செய்ய தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், வைத்தீஸ்வரனை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதும் காவேரியிடம் இல்லை. நண்பர்கள் முன்னிலையில் ஒரு பிளாட்டில் வைத்து இருவரும் திருமணம் செய்தார்களாம்.
பின்னர் மேற்கு முகப்பேரில் ஒரு பிளாட்டில் இருவரும் குடும்பம் நடத்தியுள்ளனர்.
காவேரி கர்ப்பமானதையடுத்து அவருடன் பழகுவதை விட்டுவிட்ட வைதீஸ்வரன், 3 மாதமாக வீட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டதாக காவேரி தரப்பு கூறுகிறது.
காவேரியிடம் திருமண ஆதாரம் இல்லாததால் தான் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்ததாகத் தெரிகிறது.