பாலச்சந்தரை தன் படத்தை இயக்க வேண்டாம் என்று சொன்ன ரஜினி... காரணம் தெரியுமா
சென்னை: இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த திரைப்படம் அண்ணாமலை
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து பணிபுரிந்த முதல் திரைப்படம் இதுவே.
இந்தப் படத்திற்கு பின்னர்தான் வீரா, பாட்ஷா, பாபா போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக இருவரும் பயணித்தனர்

அண்ணாமலை
இந்தியில் வெளியான குட்கார்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் அண்ணாமலை. கேன் அண்ட் ஏபல் என்கிற நாவலை மையப்படுத்திதான் குட்கார்ஸ் திரைப்படமே எடுக்கப்பட்டது. அண்ணாமலைக்குப் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இந்த திரைப்படம் ரீமேக் ஆனது.

தேவாவின் தேனிசை
தமிழ் சினிமா துறையே இசைஞானி இளையராஜா பின்னால் இருந்தபோது இயக்குனர் பாலச்சந்தர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் மூன்று திரைப்படங்களை அறிவித்தார். மூன்றுமே இளையராஜாவின் இசை இல்லாமல். ரோஜா திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானையும், வானமே எல்லை திரைப்படத்தில் பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணியையும், அண்ணாமலை திரைப்படத்தில் தேவாவையும் ஒப்பந்தம் செய்தார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியில்தான் தேவா இந்த படத்திற்கு இசையமைத்து மிகப்பெரிய வெற்றி கண்டு இசை உலகில் தனது கொடிகட்ட ஆரம்பித்தார்.

விலகிய இயக்குநர்
முதலில் இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக பாலச்சந்தர் அவர்களின் மாணவரான வசந்த் தான் ஒப்பந்தமானார். ஆனால் வெளிவராத காரணத்தினால் படத்தின் படப்பிடிப்பிற்கு இரண்டு நாட்கள் முன் வசந்த் அந்த திரைப்படத்திலிருந்து விலகவே, படக்குழுவினர் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போது பாலச்சந்தர் நானே இந்தப் படத்தை இயக்குகிறேன் என்று ரஜினியிடம் கூற,"இல்ல வேணாம் சார். நீங்க வந்தீங்கன்னா என்னால நிக்க முடியாது, உக்கார முடியாது, யார்கிட்டயும் சிரிச்சு பேச முடியாது, சிகரெட் பிடிக்க முடியாது. அதனால நீங்க வேணாம்" என்று ரஜினி தாழ்மையுடன் பாலச்சந்தரை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கதை விவாதம்
இரண்டே நாட்களில் வேறு இயக்குநரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வெவ்வேறு நபர்களிடம் பேசி இறுதியாக தனது இன்னொரு மாணவரான சுரேஷ் கிருஷ்ணாவை அந்த படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்தார். ரஜினியின் கால்ஷீட்டை வீண் செய்து விடக்கூடாது என்பதற்காக கதை விவாதத்தை விறுவிறுப்பாக ரஜினியை வைத்துக்கொண்டு நடத்த பாலச்சந்தர் திட்டமிட்டார். ரஜினியிடம் இதை கூறிய போது நான் எதற்கு என்று கேட்டாராம். அப்போது அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு தாய் தந்தை போல தனக்கு ஒவ்வொரு கட்டத்திலும் அறிவுரை வழங்கும் பாலச்சந்தர் அந்த படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொள்ள செய்தார். அதன் பின்னரே கதை விவாதம், மியூசிக் கம்போசிங் என்று தன்னுடைய படங்களில் தான் பங்கு பெற ஆரம்பித்ததாக ரஜினி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











