Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'வேதா'வுக்கு இடைக்கால தடை
நடிகர் அருண் நடித்துள்ள வேதா படம் திரையிடத் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த பைனான்சியர் டி.ஜி.ராஜாராம் என்பவர் வேதா படத்தை வெளியிட தடை விதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், வேதா படத்தின் தயாரிப்பாளர் வாசுதேவன் பாஸ்கர் என்னை அணுகி வேதா என்ற பெயரில் தமிழ் படம் தயாரிக்க இருப்பதாகவும் அதற்கு பண உதவி செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வேதா படத்தை தயாரிக்க 28 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன்.
இதற்காக இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்தின் படி கடன் தொகையை 9 தவணைகளில் வட்டியுடன் திருப்பி தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர் சில தவணைகள் மட்டும் சொலுத்தினார். பின்னர் செலுத்தவில்லை. இது தொடர்பாக தகவல் கொடுத்தும் எந்த பதிலுமில்லை. இன்றைய நாள் வரை படத்தின் தயாரிப்பாளர் வட்டியுடன் 26.64 லட்சம் திருப்பி தர வேண்டி உள்ளது.
இந்நிலையில், வேதா படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்தது. ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடுவதற்கு முன்பு கடன் தொகையை திருப்பி செலுத்துவதாக தயாரிப்பாளர் உறுதி அளித்திருந்தார்.
இப்போது அந்த ஒப்பந்ததை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார். படம் வெளியானால், நான் மிகவும் பாதிக்கப்படுவேன் எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் வேதா படத்தை வெளியிட நான்கு வாரக்காலத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.